வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, September 15, 2011

தமிழீழ தேசிய மரம் :- வாகை


தமிழீழத் தேசிய மரம்.
வாகை
தமிழீழத்தின் தேசிய மரம்.
தமிழர் தாயகத்தின்
மரபுரிமைச்சொத்தாக
விளங்கி வரும் மரங்களில்
தொன்மைத்தன்மை வாய்ந்ததாக
வாகை உள்ளது .
சங்ககாலத்தில் போரில்
வெற்றிபெறும்
வீரர்களுக்கு வாகை மலர்
சூட்டப்படுதல்
நடந்திருக்கின்றது .
சங்க கால மரபின் மூலம்
வாகை எந்தளவுக்கு தமிழருடன்
இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக்
கொள்ளலாம் . வாகையில் பல
வகைகள் உள்ளன. தமிழர்
தாயகத்தில்
பூர்விகத்தன்மையாக
உள்ளது இயவாகை என்பதாகும்.
இதன் வேறு இனங்கள் பல
நாடுகளிலும் உள்ளன .
வாகை ஆங்கிலத்தில்
சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது.
லத்தினில்
வாகை "மமோசா பிளெக்சூஸா" (Mimosa
Flexuosa).
என்று அழைக்ப்படுகின்றது.
இதன் தாவரவியல் பெயர்
albizza odaritissma.
வாகையின் பகுதிகள் சித்த
மருத்துவத்திலும்
பயன்படுகின்றது . தாவரவியல்
ரீதியாக வாகை மரத்தின்
பதிவைத் தருகின்றோம் .
Leguminosae (Mimisoideae)
தாவரவியல்க்
குடும்பத்தைச்
சேர்ந்தது வாகை . இது ஆகக்
கூடியது 25 மீற்றர்கள்
உயரத்துக்கு வளரும்.
கிளைகள்
அகலப்பரந்து ஒரு குடைபோல
ஆகும் .
தென்ஆசியப்பிராந்தியம்
தான்வாகையின் பூர்வீகம்.
இது உலர்வலயத்துக்குரிய
தாவரம் என்பதால்
இந்தியாவில் தமிழகமும்
இலங்கையில் தமிழீழமும்
அதன்
மரபுரிமை வாழிடமாகிவிட்டது.
ஆண்டுச்சராசரியாக
இதற்கு 800 முதல் 1000
மில்லிமீற்றர் வரையான
மழை தேவையானது .
வாகை வாழ்வதற்குரிய
மண்ணுக்கு 6க்குக் கூடிய
பி.எச் (pH) பெறுமான
அமிலத்தன்மை தேவை.
இது விதை மூலமும்,
தண்டுகள் மூலமும்
பெருக்கம் செய்யப்படும்.
விதைகள் விரைவாக முளைக்கச்
செய்ய 24 மணி நேரம்
அவற்றை சுடுநீரில்
போட்டுவைக்க வேண்டும்.
இதன் பிரதான
எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள்.
அவை இதன்
இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.
வாகை விறகுக்காக பண்ணையாக
வளர்க்கப்படும்
தாவரமாகவும் இருக்கிறது .

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை