வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, October 19, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-23


கடற்புலிகளின் தாக்குதல்கள் மேற்கு கடலில் அதிகரித்து சென்ற நிலையில் மன்னாரில் ஈருடக படையணியின் இன்னொரு தாக்குதலுக்கான வேவு தகவல்கள் திரட்டபட்டுகொண்டு இருந்தன.மேற்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுபடுத்த பட்டிருந்தது .குறிப்பாக கிழக்கு கடற்பரப்பை விட மேற்கு கடற்பகுதியில் கடற்புலிகளை பலமாக வைத்திருந்ததன் காரணம் இருந்தது .மேற்கு கடற்பரப்பின் உடாகத்தான் விடுதலை புலிகளுக்கு தேவையான பொருட்கள் கொண்டுவந்து சேர்க்கபட்டுகொண்டு இருந்தன.
விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு கொண்டு செல்லுவதற்கு சிறிலங்கா அரசினால் தடை விதிக்கபட்ட மின்கலங்கள் ( பற்றிகள் )எரிபொருள் போன்றவை தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாக எடுத்துவருவது வழமை.அதனால் மேற்கு கடலின் பாதுகாப்பு அவசியம் என்ற வகையில் அக்கடற்பரப்பின் பாதுகாப்பை கடற்புலிகள் உறுதிபடுத்திக்கொண்டு இருந்தனர்.
இதில் மன்னாரில் கண்காணிப்பு கருவி (ராடார் ) பொருத்தபட்ட சிறுப்பிட்டி தளம் சற்று இடையுறாகவே இருந்தது.இந்த கண்காணிப்பு நிலையில் இருந்து வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களில் விடுதலைபுலிகளின் சில வளங்கள் படகுகள் அன்று அளிக்கபட்டும் இருந்தன.அத்துடன் விடுதலைபுலிகளின் வான் பறப்புக்களை அவதானித்து தகவல் வழங்கும் வல்லமையும் இந்த தளத்திற்கு இருந்தது.எனவே இந்த தளம் மீதான தாக்குதல் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகை அதிகரித்து தரை வழியின்னுடான முற்றுகை இருக்கும் பட்சத்தில் பொருட்களுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்தால் அதனை முறியடிக்கும் மேற்கு கடலின் கட்டுப்பாடு விடுதலை புலிகளுக்கு மிகவும் அவசியம் வாய்ந்ததாகவே இருந்தது.எனவே இந்த பகுதியின் பாதுகாப்பை இலகுபடுத்தும் வகையில் கண்காணிப்புக்களை முறியடிக்கும் வகையிலும் இந்த தளத்தை தாக்கியழிக்கும் முடிவை விடுதலைப்புலிகள் எடுத்து அதற்க்கான வேவு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நாம் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்டுகொண்டிருந்த ஆயுத பற்றாக்குறை குறித்தும் அதனை முறியடிக்க விடுதலைப்புலிகள் என்ன வழிமுறைகளை கையாண்டார்கள் என்பது குறித்து சற்று பார்ப்போம்.போர் எல்லா இடங்களிலும் உக்கிரமாக நடந்துகொண்டு இருந்தமையால் அனைத்து பகுதிகளுக்கு ஆயுத வளங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைமைக்கு இருந்தது.விடுதலை புலிகளுடன் ஏராளமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளும் சர்வதேச நாடுகளிடம் இருந்து விடுதலை புலிகள் கருவிகளை கொள்வனவு செய்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்தனர்.எனவே தாயகத்திலையே அவ்வாறன கருவிகளை உற்பத்திசெய்யும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தனர்.இவற்றில் குறிப்பிட்டு சொல்ல கூடிய கைக்குண்டு உற்பத்தி தொழிற்சாலை ,மிதிவெடி உற்பத்தி தொழிற்சாலை ,ரி (51 ) ரி ( 81) துப்பாக்கிகளில் பூட்டி அடிக்கும் எறிகணை ( அருள் செல் எனப்படும் )உற்பத்தி தொழிற்சாலை குறுகிய துரத்தில் எதிரிக்கு பாரிய சேதத்தை கொடுக்கும் சண்டியன் எறிகணை சமாதனம் எறிகணை எறிகணை உற்பத்தி தொழிற்சாலை ,கரும்புலி படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலை,கிளைமோர் கண்ணிவெடி உற்பத்தி தொழிற்சாலை ,உள்ளிட்ட பெருமளவான ஆயுத தளபாட உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கிகொண்டு இருந்தன.இந்த ஆயுத தொழிற்சாலைகள் மக்கள் நடமர்ரம் அற்ற அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் காட்டு அகுதிகளில் மறைவிடங்களில் நிறுவபட்டு இருந்தன.

தாக்குதல்கள் அதிகரித்திருந்த நிலையில் இவற்றுக்கான வெடிமருந்துகள் வெளியில் இருந்து எடுத்துவருவது பாதிக்கபட்டு இருந்தது.குறிப்பாக விடுதலை புலிகளின் கப்பல்கள் சில தாக்கியழிக்க பட்ட நிலையில் வெடிமருந்துக்கான தட்டுபாடு மேலும் அதிகரித்து இருந்தத நிலையில் விடுதலைப்புலிகள் அதற்கான மாற்றுவழிய கையாண்டார்கள்.இவ்வாறன மாற்றுவழிகள் ஏற்கனவே இந்திய இராணுவத்தின் முற்றுகை காலத்திலும் விடுதலை புலிகளால் கையாள பட்டது.அதே போன்ற இந்த இராணுவ முற்றுகை காலத்திலும் இராணுவத்தினர் ஏவும் எறிகணைகளை கொண்டே அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் மாற்று திட்டம் வகுக்கபடுகிறது.வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர் மிக் விமானங்கள் தினமும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும் .சுமார் இரண்டு கிபீர் விமானகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் ( 250 ) கிலோ நிறையுடைய (8 ) குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் ( 500 ) கிலோ நிறையுடைய (4 ) குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சந்தியம் இருந்தது .அதன் பாவனை காலம் முடிவடைந்தது அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவது உண்டு..


இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய சந்தங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைபுலிகளின் வெடிமருந்து பகுதியினர்.வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள்.சுமார் ( 500 ) கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பலலட்சம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிகனைகலாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்கள் தயார்படுத்தபடும்.எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது.இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் தயாரிக்க பட்டது கைகுண்டுகள்தான்.இந்த கைகுண்டுகளுக்கு தமிழன் என்று பெயரிடபட்டது ,எதிரி பாவிக்கும் கைக்குண்டினை விட எதிரிக்கும் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும் பொறிமுறையில் ( வெடிப்பு ) இவை தயாரிக்கபட்டு அனைத்து படையணிகளுக்கும் களமுனைகளுக்கும் வினயோகிக்கபடும் இதனை விட கிளைமோர்கள் பல தயாரிக்க படுகின்றன.எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்க படுகின்றன.தானியங்கி கருவியில் இயக்ககூடிய வகையில் ரேக்னேட்டார் ( வெடிப்பிகள் )உருவாக்க படுகின்றன..

(100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது .உதரணமாக "செந்தோழன் " என்ற பெயரில் கிளைமோர்கள் உருவாக்க படுகின்றன.இதற்க்கான கல்லூரியும் உருவாக்க பட்டிருந்தது ஆதாவது விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்கள் வெடிபொருள் பயன்பாட்டாளர் லெப் கேணல் அப்பையா அவர்களின் பெயரில் அப்பையா வெடிபொருள் பயிற்ச்சி கல்லுரி நிறுவப்பட்டு ஏராளமான போராளிகள் அணிகளுக்கும் அங்கு பயிற்ச்சி வழங்கபட்டு கொண்டிருந்தது.லெப் கேணல் அப்பையா அவர்களின் பெயர் எதற்க்காக இந்த கல்லூரிக்கு வைக்கபட்டது என பார்த்துகொண்டு தொடர்ந்து செல்வோம்( தொடரும் )


2 comments:

  1. Murukaa!
    Thamilinai Thamilan pottin Tharani Thamil Pottum!

    ReplyDelete
  2. சகோதரர் சிவலோகநாதன் நன்றி உங்கள் கருத்திற்கு ..உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் தமிழில் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது சகோதரியின் வேண்டுகோள்

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை