வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, November 22, 2011

தேசியத்தலைவர் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு


தேசியத்தலைவர் சகோதரர் மனோகரன் அவர்களை முன்பு அலைகள் இணையதளம் பேட்டிகண்டிருன்தது ..அந்த பகிர்வை மீண்டும் காலத்தின் தேவை கருதி எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்

கேள்வி :-
நீங்கள் பிரபாகரனின் அண்ணன்.உங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது .அதிகாரத்தில் சகோதரர் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும்.
அதோ பாடுங்கள் சிங்கள ஆட்சியை கோத்தபாய ராஜபட்ச ,பசில் ராஜபட்ச ,
போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.அதே போல் நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்ச்சிக்கவில்லை?


மனோகரன்:-எனது தம்பி போராட்டத்தை தமிழ் மக்களின் தேசிய சொத்தாக கருதினார்.அங்கு குடும்பம் தாய்,தந்தை,அண்ணன் .தங்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.எந்தவித அதிகார துஸ்பிரயோகங்களும் செய்யாமலே ஏன் தந்தை போலவும் தம்பியும் நேர்மையின் வடிவாக வாழ்ந்து காட்டியுள்ளார்.அவருக்கு அண்ணனாக வாழ்வது மிகவும் கடுமையான ஒரு யாகம் என்றே கூறவேண்டும் .தம்பியின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யாத ஓர் அன்னானாக வாழ்வதுதான் சிறந்த வாழ்வென்று கருதி வாழ்ந்தேன்.தம்பி என்பதுக்காக தேசத்துக்கு சொந்தமான வாகனத்தில் நாம் ஏறி பயணிக்க முடியாது.தம்பியின் அதிகாரத்தை பயன்படுத்தாது நாம் நாமது சொந்த கால்களியையே நடந்தோம்.தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ள அயலவர்கள் பயந்தார்கள்.எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு.தங்கள் வீட்டை தாண்டி போனால் ஆமியால் ஆபத்து என்று கூறி போகக்குடாது என்று கூறியவர்கள் பலர் உண்டு.அனால் தம்பியின் ஆட்ச்சி வந்தபோது அவர்கள் வரவேற்றனர்.அப்போதும் நாங்கள் பழையவையை மறவாது வாழ்ந்தோம்.பிரபாகரனின் ஒழுக்கத்துக்கு உரிய தியாக வாழ்வை ஏன் தாயும் தந்தையும் வாழ்ந்தார்கள்.நானும் அவ்வழியே நடந்தேன் என் தம்பி குடும்பம் என்று எங்களை தனியாக கவனித்தது கிடையாது...

கேள்வி:-குடும்பம்- போராட்டம் இரண்டும் வேறு வேறான சங்கதிகள் இவற்றுக்குள் பிரபாகரன் பணி எப்படி நகர்ந்தது என்பதை கூற முடியுமா?

மனோகரன்:-ஓர் சிறிய உதாரனத்தை கூறுகின்றேன்.ஒரு தடவை எந்தம்பியின் மகன் சாள்ஸ் தனக்கு ஒரு விளையாட்டு பொருள் வேண்டும் என்று கேட்டார் அதற்க்கு பதில் கொடுத்த பிரபாகரன்.நிதி பொறுப்பாளர் தமிழேந்தி எனக்கு இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான மாத சம்பளத்தை வழங்கவில்லை,அதனால் விளையாட்டு பொருளை வேண்ட முடியவில்லை என்று பிள்ளையை சமாதனம் செய்தார்.தனது பிள்ளைக்கு ஒரு விளையாட்டு சாமானை வாங்ககூட அவர் போராட்டத்தில் தனக்கிருந்த அதிகாரத்தையோ பாவித்தது கிடையாது.என் தம்பியும் தந்தை போலவே எளிமையான வாழ்கையே வாழ்ந்திருந்தார்.

கேள்வி:-அவர் எவ்வளவு நேர்மையாக இருந்தாலும் வெளிநாடுகளில் அவர் பெயரில் இங்குள்ளோர் நடாத்திய நிர்வாகங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும் இவை குறித்து உங்கள் தம்பிக்கு என் அறிவிக்கவில்லை.

மனோகரன்:-உண்மைதான் நான் வாழ்ந்த டென்மார்க்கில் வாழ்ந்த சம்பவங்கள் பலத்தை ஆதாரத்துடன் எழுதி வன்னியில் வாழ்ந்த என் தந்தையிடம் அனுப்பி தம்பியிடம் கொடுக்கும்படி கூறினேன்.நான் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் என் தந்தை வேலுப்பிள்ளை ஒரு வேலை செய்தார்.அந்த முறைப்பாட்டு கடித்ததி திறந்து பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பினார்.உடைக்கபடாத அக்கடிதத்தின் மேல் உறையில் ஒரு குறிப்பு எழுதி இருந்தார்.நன் அவருடைய தந்தை,நீ அவருடைய அன்னான் ,நாம் இருவரும் குடும்பத்தவர்,தியாகமே வடிவான ஒரு போராட்டத்தில் உறவு முறை என்ற காரணத்தை பயன்படுத்தி யாதொரு தாக்கத்தையும் செய்தல் கூடாது என்று சுட்டி காட்டியிருந்தார்.அதே கடிதம் என் தந்தையிடம் இருந்து பிரபாகரனுக்கு போயிருந்தால் அவர் அதைவிட நீண்ட குறிப்புரையுடன் உடைத்து பார்க்காமலே எனக்கு அனுப்பியிருப்பார்.இதுதான் அண்ணன்,தம்பி,தந்தை என்ற எண்கள் முக்கோண உறவு போராட்டத்தின் பரிமாணம்,இந்த நேர்மையும் ஒழுக்கமும் என் தந்தையின் பாரம்பரியத்தால் வந்தது.

கேள்வி:- சமீபத்தில் உங்கள் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமடைந்தார் அவருடைய மரணத்தை பற்றி என்ன நினைக்குறீர்கள்?

மனோகரன்:-எனது தந்தையார் மரணம் மர்மமாக உள்ளது புதுமாத்தளனில் இறுதி நேரம் நடந்தது என்னெவென்ற உண்மைகள் பல அவருக்கு தெரிந்திருக்கும்,தான் அறிந்த உண்மைகள் யாருக்கும் மறைக்கும் பழக்கம் உடையவர் அல்ல அவர்.எத்தனையோ உண்மைகளை எடுத்து சொல்லகூடிய போரின் சாட்சியமாக அந்த மண்ணிலையே வாழ்ந்தவர்.வருடைய குரல் உலகத்தின் முன்பு வெளிவர முடியாதபடி அமுக்கபட்டு விட்டது.அவர் இறந்த காரணத்தால்தான் அவர் எங்கே வைக்கபட்டிருந்தார் என்ற உண்மை தெரியவந்தது.இல்லாவிட்டால் இறக்கும் வரை அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றிய மர்மம் மேலும் பல காலம் நீடித்திருக்கும்.மேலும் அவர் எங்கு சென்றாலும் தனது முக்கிய ஆவணங்களையும் குறிப்புக்களையும் சிறிது வையில் வைத்து கையேடு கொண்டு செல்வார்.புதுமாத்தளனில் கூட அவர் அதை எடுத்தபடியே வந்திருப்பார்.அனால் இன்றுவரை அவரது முக்கிய ஆவணங்கள் கூட நாம் பெற முடியவில்லை..

கேள்வி:- இங்கிருந்து உங்கள் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுபவங்கள் உண்ட ?

மனோகரன்:-வன்னியில் இருந்து அடிக்கடி என்னுடன் பேசுவார்.அங்கு நிலைமை மோசமடைந்ததும், அதற்க்கு முன்னர் கடைசியாக டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டார்.அப்போது நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டதாக தெருவித்தார்.ஓரளவு நிலைமை சீருக்கு வர தொடர்பு கொள்ளுவதாக கூறியிருந்தார்.பின்பு அவருடைய மரணஸ் செய்திதான் இணையத்தில் வெளியாகியிருக்க கண்டோம்.அவர் உயிருடன் இருந்தால் உலகத்தின் எத்தனையோ பதிலற்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும்.

கேள்வி:-உங்கள் தந்தையார் தன கருத்துக்களை சுகந்திரமாக சொல்லும் ஒருவராகவே இருந்தார்.பிரபாகரன் வன்னியின் நடந்த ஆட்சி பற்றி அவருடைய கருத்து என்னவாக இருந்தது?

மனோகரன்:-அதை அறிவதற்கு சிறிது காலம் பின்னோக்கி செல்லுவது அவசியம்.எனது தந்தை டி,எல்,ஒ ( மாவட்ட கணணி அதிகாரி)பணிபுரிந்த காலத்தில் முத்தையன்கட்டு,குடியேற்ற திட்டம்,வன்னி படித்தவர் வாலிபர் குடியேற்ற திட்டம்,போன்றவற்றை ஆரம்பித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்,அப்போது காணிகளை வழங்குவதும் அவர்தான்.படித்த தமிழ் வாலிபர்களை அங்கு குடி ஏற்ருவதுக்கு அவர் இரவு பகலாக போராடினார்.அங்கு தமிழ் வாலிபர்களை குடி ஏற்ராவிடால் அந்த இதய பூமியை சிங்கள குடியேற்றமாக மற்ற விரும்புவதாக அரசு அவரிடம் கூறியிருந்தது.அதை தொடர்ந்து எனது தந்தை பழைய வன்னி பாரளமன்ற உறுப்பினர்களான வவுனியா செல்லதம்பு,உடுப்பிட்டி இராஜலிங்கம்,போன்றோருக்கு விடையத்தை விளங்கபடுத்தி படித்த தமிழ் வாலிபர் குடியேற்றங்களை வன்னி நோக்கி நகர்த்தும்படி வலியுறுத்தினார்.ஈழத்தை மீட்பது என்பது ஈழ மண்ணில் தமிழன் பறந்து வாழ்வதால்தான் தீர்மானிக்கும் என்று கருதினார்.அனால் அன்று அவர் நினைத்தது போல பெருந்தொகையான வன்னியின் வெற்றிடங்களை நோக்கி மக்களை நகர்த்த முடியாமல் போன கவலை அவருக்கு இருந்தது.பின்பு என் தம்பி பிரபாகரன் ஒரு குறுங்காலத்தில் செய்து,வன்னியில் ஒரு அழகான தமிழீழ அரசையே சகல படைபலங்களோடு உருவாக்கியபோது தந்தை பெரும் மகிழ்சி கொண்டார்.வன்னியில் நடைபெற்ற நிர்வாகம் அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.கிளிநொச்சியின் சிறப்பை கொண்டு அவர் பெருமகிழ்ச்சி கொண்டார்.அன்று தான் பார்த்த கிளிநொச்சிக்கும் .இன்று பிரபாகரன் காலத்து கிளிநொச்சிக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக போற்றினார்.தன்னால் முடியாத விடையத்தை பிரபாகரன் சிறப்பாக செய்ததாக போற்றினார்.

கேள்வி:-அனுராதபுரத்தில் உங்கள் தந்தை வாழ்ந்த காலம்,எல்லாளன் சமாதி,உங்கள் தம்பியின் பிறப்பு இவைகள் பற்றி ஒரு கதை உள்ளது.அது பற்றி என்ன கூறுகிறீர்கள்.

மனோகரன்:-அனுராதபுரத்தில் எல்லாளன் சமாதி இருந்த இடம்,பாழடைந்த கோவில் இவற்றுக்கு அருகால் போகும் வீதியில்தான் எங்கள் வீடு இருந்தது.அந்த இடம் முற்றிலும் அமைதி நிறைந்த பகுதியாக இருந்தது.இனம்புரியாத அமைதி அங்கு நிலவும்.சுமார் இரண்டாயிரம் வருடங்களாக சிங்கள மக்கள் எல்லாளன் சமாதிக்கு விளக்கேற்றி வருகின்றார்கள்.அந்த விளக்கு ஈட்டிபோல எரியும்.அதை பார்க்கும் போது மாமன்னன் மறத்தமிழன் எல்ளாலனே அங்கு அருவமாக வாழ்வது போன்ற பிரமையும் மதிப்பும் ஏற்படும்.அத்தகைய உணர்வுகளை என் தந்தையும் தாயும் மனதில் தாங்கி வாழ்ந்த காலத்தில் அதே எல்லாளன் சமாதி இருந்த இடத்திலையே கருவுற்றார் பிரபாகரன்.என் தம்பியின் வாழ்வை சீர்துக்கி பாருங்கள் எல்லாளன் போலவே தமிழ் மீது காதல் கொண்ட ஒருவராக வாழ்ந்த வாழ்வு புரியும்.

கேள்வி:-இந்த விடையம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு தெரியுமா?

மனோகரன்:-எமக்கு முன்னரே இதை சரியாக மோப்பம் பிடித்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்கள்தான்.தம்பி போராட புறப்பட்ட காரணத்தால் இராணுவத்தால் அடிக்கடி கைது செய்யபடுபவர்கள் நானும் என் தந்தையும் தான்.எண்ணற்ற தடவைகள் கைது செய்யபட்டு யாழ் கோட்டை சிறையில் அடைக்கபட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது.அதே போல ஒரு தடவை என் தந்தையை பிடித்து குருநகர் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றார்கள்.ஓர் இராணுவ சிப்பாய் அவரை கொதிக்கும் வெய்யிலில் நிறுத்தி வைத்திருந்தான்,அந்த நேரம் அங்கு வந்த போலீஸ் ஒருவர் அவரை உள்ளே அழைத்து சென்று உரையாடினார்.அப்போதுதான் பிரபாகரன் சாதரணமான பிறப்பல்ல என்று தாம் நினைப்பதாக சொன்னார்.எதோ ஒரு தாக்கம் இல்லாமல் பிரபாகரன் இவ்வளவு உறுதிகொண்ட ஒருவராக,தமிழீழ பற்று கொண்டவராக இருக்க முடியாது என்றும் கருதுவதாக கூறினார்.அப்போதுதான் எனது தம்பி அனுராதபுரத்தில் கருவுற்ற ஒரு தமிழன் என்பதை சிங்களம் அறிந்து அதிர்சியடைந்தது.

 கேள்வி:-உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது?

மனோகரன்:- பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள்.ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள்.இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள்.அனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை .அந்த தேடலுக்கு பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் 
அறிவால் கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வி:-விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாக கூறிய கே.பத்மநாதன்.அத்தருணம் உங்களிடம் என்ன கூறினார்?

மனோகரன்:-கே.பி உடகங்களில் தோன்றி ஒரு தடவை இறந்து விட்டதாகவும்.இன்னொரு தடவை இறந்து விட்டதாகவும் கூறினார்.அவர் மற்றவர்களில் இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மன்னிளுமாக இரண்டு இடங்களிலும் தேடியிருந்தார்.இப்படி இரண்டும் கேட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது.கே.பியின் கடமை என்ன பிரபாகரனின் உடன் பிறந்த அன்னான் நான் இருக்கிறேன்..என்னிடம் ஒரு தடவை கூட இது குறித்து பேசியது கிடையாது.

கேள்வி:- வேறு யாரவது தொடர்பு கொண்டார்கள?

மனோகரன்:-தமிழகத்தில் இருந்து பழ நெடுமாறன் ஒருவர் மட்டும் தொடர்பு கொண்டு ,பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாக கூறினார்.மற்றபடி யாருமே இதுவரை என்னுடன் இது குறித்து பேசியது கிடையாது.ஒருவரிடமும் இந்த கேள்விக்கு பதில்
இல்லை

கேள்வி:-அப்படியானால் இந்த கேள்விக்கான பதிலை யாரிடம் தேடுவது?

மனோகரன்:-பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக்கொள்ள வேண்டும்.நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டு இருந்தேன் என் தம்பி எல்லாளன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதேபோல் மானமுள்ள தமிழுக்காகவும் உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்க்காகவும் அவர் வாழ்ந்தார்.சங்ககால பாடல்களில் உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான்.தள்ளாத வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்கு போன வீரன் எல்லாளன்.அது போல பிரபாகரன் உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நுற்றாண்டுகளில் சங்க கால வீர வாழ்வை வாழ்ந்தார்கள்.புறநானுற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வில் ஓவியங்களாக மாவீரர்களை வைத்து வரைந்து காட்டினார்.இயற்கையாகவே பிரபாகரன் ஒரு ஓவியர் என்பது உங்களுக்கு தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானுற்று தமிழ் வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதை புரிய வேண்டும்.


 கேள்வி:-இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை நகர்ந்து போகும் நிகழ்வு.எதிரிகளின் நீரை குடித்து உயிர் வாழாத சேரன் செங்குட்டுவனின் வீரம் தீலிபனிடம்.திருமணம் ஆன அன்றே போருக்கு போன புறநானுற்று வீரம் குமாரப்பவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார்.கரிகாலன் என்ற பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கு தெரியும்.இருப்பினும் அவர் வாழ்வின் பிற்பகுதி புறநானுர்ரின் இறுதி புள்ளியின் தாக்கம் தெரிகிறதே..

மனோகரன்:-கடைசியில் நடைபெற்ற புதுமத்தளன் போர்க்களமும்.மாங்குடி மருதனார் பாடிய சங்ககால போர்க்களமும் வேறு வேறல்ல.வெட்டி எடுக்கபட்ட முடித்தலைகள் அடுப்பாக.பிளக்கபட்ட கபாலங்கள் பாத்திரமாக.அதற்குள் இரத்தமும்,சதையும்,நிணமும்,இட்டு வெட்டிய கைகளை அகப்பையாக துளாவி ஒரு போர் யாகம் நடத்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள்.அதைத்தான் புதுமாத்தளனில் கண்டு துடி துடித்தோம்.உண்மையில் அது புறநானுற்று போர்க்களம்தான்.

கேள்வி;-இருக்கலாம் இருந்தாலும் இப்போது உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே? வெற்றிடத்தால் ஒரு புதிய போர் என்ற கோட்பாடு தெரிகிறதே?உங்களுக்கு தெரிகிறதா?

 மனோகரன்:-உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது.வெற்றிடத்தால் ஒரு போர்?அதற்க்கான பதில் அவர் படித்த நுலில் இருக்கிறது.ஒரு மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நுல்கள்தான் என்று கூறுவார்கள்.பைபிள் படித்தவர்கள் பைபிள் போல வாழ முயற்ச்சிப்பதும்,மார்க்கசியம் படித்தோர் மார்க்கசிய வாதிகளாக வாழ்வது ஏன்..அவர்கள் படித்த நுலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும்.அதே போலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்களின் வாழ்கையை கடைப்பிடித்தார்.நேதாஜின் கடமை உணர்வு மிக்க, ஒழுக்கம் குறையாத இராணுவ தொண்டர்களை அவர் வடிவமைத்தார்.நேதாஜியின் இறுதி காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் போனது...இப்போது பிராபகரன் விரும்பி படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி நடத்தியிருப்பது தெரிகிறது.இது புறநானுற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்..-நேதாஜி கதை படித்து,அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக வைத்திருக்கிறார் பிரபாகரன்.அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது அதுதான் புதிய புறநானுர்ரின் புதிய அதிசியமான பக்கம்.அதற்க்கு பிறகு வருகிறேன்....தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும் போது பாரத கதை கேட்டு போர் வீரனான அபிமன்யு அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும் போதே கேட்டு அவர்போல் தமிழ் வீரனானார் பிரபாகரன் என்று முன்னர் கூறியிருந்தேன்.பின்னர் மறு பகுதியை கூறுகின்றேன்.

கேள்வி:-சரி நம்மை விடுங்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள் .அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது சாஸ்த்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா?

மனோகரன்:-சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின் நம்பிக்கையால் எல்லை படுத்தபடுவது.அனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலையே தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்ததாக இருக்கும்,யாரும் அவரை காண இயலாது என்றும்..அவர் எங்கே என்கின்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தெருவித்தார்.நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை,அனால் இப்போது அதை எண்ணி பார்க்கிறேன். அதற்க்கு மேலே பிரவேசிக்கவில்லை

 கேள்வி:-போரின் பின்பு பிரபாகரனின் உடலம் போன்ற ஒன்று காண்பிக்கபட்டதே அதை ஏன் நீங்கள் பொறுப்பெடுக்கவில்லை?

மனோகரன்:-அது உண்மையாகவே பிரபகாரன் உடலம் என்று எரிக் சொல்கைம் ஆவது உறுதி செய்தாரா இல்லையே ....சரி அதை விடுங்கள் அது பிரபாகரன் உடலம்தான் என்றால் அதை ஏன் சில நாட்களாவது பாதுகாத்து வைத்திருக்கவில்லை.ஏன் உடனடியாக எரியுட்டினார்கள்? இப்படியான குழப்பகரமான நிலையில் நாம் மட்டும் ஓடிசென்று பொறுப்பேற்றால் என்ன நடக்கும்?
தவறான
ஓர் உடலத்தை காட்டி நாமே அதை உறுதிசெய்து விட்டதாக அரசு பிரச்சாரம் செய்யும் அத்தகைய பொறிக்குள் சிக்குண்டாள் அது பெரிய முட்டாள் தனமான செயலாக அல்லாவ முடியும்?அதைத்தான் விடுங்கள் எனது தந்தை இருக்குமிடத்தை அவர் இறக்கும்வரை ஏன் சிறிலங்கா அரசு இரகசியமாக வைத்திருந்தது..இப்படிபட்ட சிறிலங்கா அரசு நம்பிக்கைக்கு உரியது என்று கருதுகிறீர்களா?சிறிலங்காவின் கதை கேட்டு இந்தியாவிலையே ப.சிதம்பரம் ஒருவிதமாகவும்.சி.பிஐ ஒருவிதமாகவும் அறிக்கை விட்டதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள்...இதை எல்லாம் தொகுத்தூ பார்த்தால் அன்று நாம் ஏன் உரிமைகோர தயங்கினோம் என்ற கேள்விக்கான நீதிக்கான பதில் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.

கேள்வி:-சரி அதற்க்கு பிறகு வருகிறோம்? உங்கள் சகோதரர் பிரபாகரன் உங்களோடு தொடர்பு கொள்ளுவது உண்டா?

மனோகரன்:-ஆம் அவர் போர் இறுக்கமடைவதற்கு முன்னர் வரை என்னுடன் தொடர்பில் இருந்தார்.குறித்து கொள்ளுங்கள்?குடும்ப விவகாரங்களை மட்டுமே என்னுடன் பேசி கொள்ளுவார்.சாள்ஸ் சிறந்த முறையில் படித்து எட்டு பாடங்களிலும் சித்தி பெற்று கட்டுபெத்தை தொழில் நுட்பகல்லுரிக்கும் தேர்வான போது அந்த மகிழ்வை சொல்ல எடுத்தார்.இப்படி குடும்பத்தின் ஒவ்வொரு நல்ல நிகழ்வையும் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார்.வாழ்வு-தாழ்வு-இன்பம்-துன்பம்- எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்...

கேள்வி:-புதுமாத்தளன் சம்பவங்கள் இடம்பெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லைய?

மனோகரன்:-தொடர்பு கொள்ளவில்லை குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்..சாள்ஸ் இறந்ததாக கான்பிக்கபட்டபோது மட்டும் ஏன் என்னுடம் தொடர்பு கொள்ளவில்லை.அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும் தானே.அப்போது நடேசன் தொலைபேசியில் பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்..அவர் முலமகவேனும்?ஏன் அந்த செய்திறை எங்களிடம் குறைவில்லை..ஆம் அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் முலமகவேனும் என்னிடம் சொல்லியிருப்பார்.மேலும் அப்போது ஏன் தந்தை அங்கே இருந்தார்.அவராவது அந்த செய்தியை எம்மிடம் சொல்லியிருப்பார்.யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.எல்லோரின் கைகளிலும் தொலைபேசி இருந்தது,அது செயற்பட்டுகொண்டுதான் இருந்தது.பிரபாகரனின் மனைவி எம்முடன் தொடர்பில் இருந்தவர் அவர்கூட போன் செய்யவில்லை...ஏன் ?நன்றாக ஜோசித்து பாருங்கள் ..எல்லாவற்றையும் ஜோசித்தால் எங்கோ ஒரு இனம்புரியாத இருள் விளக்கமின்றி இருப்பது தெரிகிறது அல்லவா?

கேள்வி;- உண்மைதான்?சரி உங்கள் தம்பி பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்..நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று படங்கள் வெளியாகின அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

மனோகரன்:-உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன் அவர் தமிழ்லேந்தியிடம் மாதசம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய விளையாட்டு சாமனையே வாங்கிகொடுக்க முடியாது ஜோசித்தவர் .எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர்.பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர்.இரந்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமர்ரவர்கள் உலகில் இருப்பார்கள் என்று கருதும் அவர் முலையில் இல்லவே இல்லை .எனவே பொதுப் பணத்தில் ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் இடமளிக்கவில்லை.அனால் பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் அவரை பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள்.அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யபட்ட மிக மிக விலை குறைந்த ( ) குரோனர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள்.அதுதான் சிறிலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு.ஒரு துய போராளின் வாழ்விற்கும் தனது வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை.அந்த பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்து விட்டார்.

கேள்வி:-சரி பிரபாகரன் இருக்கிறார் அவர் வெளிப்படவில்லை... என்று வைத்துகொள்ளுவோம்...இந்த நிலையில் யார் பேச்சை கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தோன்றிவிட்டார்களே?

மனோகரன்:-பிரபாகரன் தனக்கு பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்று கூறியிருக்க மாடார்கள்.இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளைநாமே தொடர்கிறோம் என்று குறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்கள் என்பது தெளிவு.பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.

கேள்வி:-அப்படியானால் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற இன்னுன்று வருகிறதே..அது பற்றி  என்ன கூறுகிறீர்கள்?

மனோகரன்:- நமது நாட்டில் உங்கள் வீட்டை நீங்கள் போய் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டுக்கான உறுதியை கொண்டுபோக வேண்டும்.ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்க்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.உறுதி இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கே உங்களை இராணுவம் அனுமதிக்கமுடியாத நிலை இருக்கிறது.பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கபடுகிறது..அதற்கும் உறுதி வேண்டுமோ என்னமோ...(சிரிப்பு) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்..வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது. ஆனால் எமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள்.இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது..இந்த நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்கு ஒரு உரிமையை பெற்றுத்தர முடியுமா?பிரபாகரன் வெளிநாட்டில் ஒரு அரசை அமைக்கவ போராடினார் நாடு கடந்த அரசு பற்றிய கேள்விக்கு பதிலாக கேள்விகளை வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்பொது புரிந்திருப்பீர்கள்.இவைகள் இடண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள்.நாம் பதில் கூறவேண்டிய தேவை இல்லை..

கேள்வி;- அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது?


மனோகரன்:-எனது தம்பி பிரபாகரன் தமிழர் தாயகம் பிளவுபடகூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார்.புதுமாத்தலனுக்கு பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை

பிளவு படுத்துவதாகவே இருக்கிறது. இப்படியான முன்னெடுப்புக்கள் பற்றி கருத்து கூறுவதை விட அவற்றின் விளைவுகள் மட்டுமே பார்க்க வேண்டும்.வடக்கு கிழக்கு தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கையை..வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமிழீழம் தொடர்பான பணிகள் ..இவையனைத்தும் தமிழினத்தை ஒற்றுமை படுத்தி உள்ளனவா இல்லை கூறுபோட்டு உள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது.பிரபாகரன் யாரையும் ,எந்த தளபதியையும் முன்னிளைபடுத்தியது கிடையாது.காரணம் அவருடைய முதன்மை தளபதிகள் தமிழீழ மக்களே மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பதும்.பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம்,மற்றவருக்கல்ல.இத்தனை காலம்,போராடிய ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி,வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலையே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை.எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்க்கவில்லை..இன்று மாபெரும் துறவம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்...அப்படிபட்டவர்கள் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..


கேள்வி:-சரி இப்படியான குழப்பநிலை வரும் என்று கருதிய பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே?


மனோகரன்:-நான்தான் சொல்லிவிட்டேனே அவர் பற்றற்ற வாழ்வு வழ்ந்தவறேன்று.மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்பொழுது தன பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள்.பிரபாகரனிடம் நான் இது பற்றி பேசியுள்ளேன் .ஏன் வாழ்வு இருக்கும்வரை ,நான் நேசித்த ஈழமண் இருக்கும்வரை ஏன் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.தன வாழ்வு முடிந்தால் தன பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான்,ஒவொரு தமிழீழ முடிமகனும் அவருடைய உறவுதான்.தன பிள்ளை மாற்றார் பிள்ளை என்று பேதம் பார்த்து வாழும் ஒருவர பிரபாகரன் இல்லையே..... தன பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒன்றும் ஒளி குன்றியதல்ல .இதுதான் எனது உள்ளம் என்று எந்த தளபதியை வைத்தாவது உங்களுக்கு சொன்னாரா.. அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்து சொன்னாரா இல்லையே...அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்..இப்ப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும்,போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்து கிடக்கிறார்கள். இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம் ..


கேள்வி:-புரிகிறது இந்த உண்மையை இதுவரை யாரும் சுட்டி காட்டவில்லை..இவைகளை கேட்க்கும் பொது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வரவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது..அவர் வருவாரா?


மனோகரன்:-புதுமாத்தளனுக்கு பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ?எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்லவேண்டிய பதில் என்ன?
ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் ஒருபோதும் தன வாழ்வை வெற்றிடமாக்கியிருக்க மாட்டார்.புதுமாத்தளன் நிகழ்வுக்கி சில நாட்களுக்கு முன்னதாக நடேசன் ஒரு செய்தியை தெருவித்தார்?அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்?அதற்க்கு பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை .எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்க்கான பதிலை தரமாலே தன பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார்.ஒன்றுமில்லாத வாய்பேச்சு வீரனின் வெற்றிடத்தில் விடுதலைப்புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன்..""புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"" என்ற முடிவுரையை எழுதிவிட்டு போராட்டம் என்ற அத்தியாயத்துக்குள் போனவர் பிரபாகரன்..இப்போது அவர் நேதாஜி போல ஒரு வெற்றிடத்தை தன வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன்.இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்..அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி.அதன் மூலம் இந்திய சுகந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜின் கதையின் நிற்கும் மர்மமான உண்மை..பிரபாகரனும் அதே முடிவைத்தான் எழுதியுள்ளார்..தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் ,இல்லாமலும் போராடுவார்...மறுபடியும் வெற்றிடம்..வெற்றிடத்தில் யார் வருவார் ? ..மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா?


நன்றி-அலைகள் கொம்

பேட்டிகண்டவர் அலைகள் ஆசிரியர் கி.செ .துரை

இந்த கருத்தாடலில் இருந்து நீங்கள் என்ன கற்று கொண்டீர்கள் என்பதை ..உங்கள் கருத்துக்கள் மூலம் பதிவு செய்யுங்கள் ..நன்றி உறவுகளே


No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை