வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 31, 2012

இறுதி நாட்களும் எனது பயணமும்-7கையாலாகாதவர்கள் ஆனோமே என்ற விரக்தி எங்களை பேசாமடந்தைகளாக்கியது

 

சாதாரண உடைகளுக்கு மாறிய எங்களை பார்க்க எங்களுக்கே பிடிக்கவில்லை. ஆளையாள் பார்த்து சரி என தலையாட்டிவிட்டு மூழிக்காதுகளோடு புறப்பட்டோம். ‘அக்கா இந்த திறப்பை என்ன செய்ய?’ என்றாள் சந்தியா பதற்றமாக. ஏனெனில் அவளது கையிலிருந்தது அலமாரித்திறப்பு.

Monday, January 30, 2012

வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி கண்டேன்

 

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி

Sunday, January 29, 2012

இறுதி நாட்களும் எனது பயணமும்-சண்டை முடிஞ்சிது தலைவர் நேற்றிரவு வெளியேறிவிட்டார். 06 ஆனதி




16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே பொழுதை நகர்த்தினோம். படையினர் நெருங்கி வந்துகொண்டிருப்பது புரிந்தது. சன்னங்கள் எங்கள் தலைகளின்மேலால் சீறிப்பாய்ந்தன. சதக் பொதக் என்று தம்முடலில் இறங்கும் சன்னங்களை பனைமரங்கள் வாங்கிக்கொண்டன.
முற்றுமுழுதுமாய் கொலை வலயத்திற்குள் நின்றோம். எங்களைச்சுற்றி ஆர்.பி.ஜி எறிகணைகள் விழத்தொடங்கின. அவை வெடித்துச்சிதறிய

ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை .பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர் தடங்கள்–3

 

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக, தடங்கள்-1 தடங்கள்-2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.
அது 1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவ்வருடத்தின் யூலை மாதத்தில் ‘ஓயாத அலைகள்’ என்ற பெயரில் புலிகள் நடத்திய தாக்குதலில் முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சிறிலங்கா இராணுவம்

Saturday, January 28, 2012

எல்லோருக்கும் விழிகள் உண்டு ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு

 எல்லோருக்கும் விழிகள் உண்டு, உலகினைப் பார்க்க

ஆனால்
ஒரு சிலருக்கே தரிசனம் உண்டு, காலத்தைக் கடந்து  
உலகினைப்பார்க்க.
இப்படி ஒரு அறிஞன் கூறிய தரிசனநோக்கு
ஈழத்து மண்ணிலும் கனன்றது ஒருசிலரிடம்
அக்கனலின் ஒரு பொறி
விடுதலைத் தேவியின் வயிற்றில் விழுந்து
நம் தமிழ்ஈழ நாடெனப் பிறந்தாள்.
56ல் ஆரம்பித்த
பேரின ஆதிக்கம் ஓங்குதற்கு முன்னரே,

ஆட்லறிக்கான ஒரு சண்டை நடவடிக்கை பகுதி-02

 
 


மணியண்ணை சொன்ன அதிகாலை நான்கு மணியும் வந்து சேர்ந்தது. எத்தனைபேர் இரவு நித்திரை கொண்டிருப்பார்களென்று தெரியவில்லை. எந்நேரமும் ‘லைன்’ பண்ணக்கூடியவாறு அனைவரும் தயாராகவே இருந்தார்கள். நான்குமணிவரை புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி நடந்தபடிதான் இருந்தது.
எல்லோரையும் வரச்சொன்னார்கள். தேவராஜ்

எனது பயணமும்.பாகம்-05

17.05.2009. பொழுது புலர்ந்தபோது பிரமிப்பாக இருந்தது! இறுதி நாட்களும் 
 


அதுவரை பொறுமையாக இருந்த படையினன் கதிரையில் அமர்ந்தான். அந்தப் படையினன் உண்மையிலேயே

Friday, January 27, 2012

ஆட்லறிக்கான ஒரு சண்டை பாகம்-01





1997 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம். ஒரு நீண்ட பயிற்சித் திட்டத்துக்காக இயக்கத்தின் படையணிகளிலிருந்தும் துறைகளிலிருந்தும் நாங்கள் ஒன்று சேர்ந்திருந்தோம். மக்கள் வாழிடத்திலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக ஒரு காட்டுத் துண்டில் எமது கற்கை நெறிக்கான தளம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தளவமைப்பு வேலைகள் முடிந்து எமது கற்கைநெறி தொடங்கியபோது கூடவே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையும்

இறுதி நாட்களும் எனது பயணமும்- 04

திடீரென அவ்விடத்தில் ஆர்.பி.ஜி எறிகணைகள் நான்கைந்து விழுந்தன. 
 




16.05.2009. அன்றைய பகலும் காப்பகழிக்குள்ளேயேதான் கழிந்தது. இரண்டேபேர் இருக்கக்கூடிய பதுங்குகுழிக்குள் நான்குபேர் நின்றவாறே

Thursday, January 26, 2012

காவிய நட்பு

 

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பார்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார்.
தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய

விடுதலைக்கான உணர்வு செயல்வடிவில்

 

மேற்கு நாட்டில் பிறந்து வாழ்பவர் என்ற முறையிலும், இத்தாலி (பாசிச ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது), இந்தியா (காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது), தென் ஆபிரிக்கா (இன வேறுபாட்டிலிருந்து விடுதலை பெற்றது) போன்ற பல தரப்பட்ட நாடுகளுக்கு பிரயாணம் செய்தவர் என்ற முறையிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்களின் 50வது பிறந்த தினத்திற்கு வாழ்த்துச் செய்தி கொடுப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களால் 1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

நாம் அணிவகுத்துள்ளோம்

இழந்த எமது நாட்டை மீட்க


எதிரி எமது நாட்டை

சிங்களப் பேரினவாதி அப்துல்கலாமிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்ட கேள்வி

 

உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்….
யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு

இறுதி நாட்களும் எனது பயணமும் - 3

மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா!
 

இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன. எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத் தொலைத்த, உறவுகளை இழந்த

Wednesday, January 25, 2012

பேச்சுவார்த்தைகளின் தோல்வியும் புதிய வழிகளின் அவசியமும்

 எமக்கிடையே நாம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் எதிரிகளிடம் சரணடைய நேரும் தீர்வுத்திட்டம், பேச்சுவார்த்தை, சமரசம், உடன்பாடு, ஒப்பந்தம்,ஒப்பந்த மீறல், ஒப்பந்தம் கிழித்தெறியப்படல், வட்டமேசை மகாநாடு, தெரிவுக்குழு, மீண்டும் பேச்சுவார்த்தை என இலங்கை அரசியல் அகராதியில் இச்சொற்தொடர்கள் தீர்வின்றி துச்சாதனன் கையில் நீளும் பாஞ்சாலியின்

விடுதலையின் வழிகாட்டி

 

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான்.
தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து

முள்ளிவாய்க்காலையும் நந்திக்கடலையும் மறக்க முடியாது -ஈழக் கவிஞர் தீபச்செல்வன்


 
முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக

Tuesday, January 24, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 12


‘ஐயோ, உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றுதான் முதலில் கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரபாகரன் கேட்டது, `ஐயோ, யார் செய்தது?’

அவருக்குத் தெரியும். அத்தனை எளிதில் போகக்கூடிய உயிர் இல்லை அது. ஏனெனில் சதாசிவம் கிருஷ்ணகுமார் என்கிற வெங்கிட்டு

இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம்-02



உடையார்கட்டு தொடக்கம் முல்லைத்தீவின் பல பகுதிகளும் சனநெரிசலால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தன. மனிதர்களின் ஆக்கிரமிப்பு அனர்த்தங்கள் போதாதென்று இயற்கையும் மக்கள்மீது சீறி விழுந்தது. காற்றும் மழையும் வந்து மக்களின் தறப்பாள்களை குதறி எறிந்தன. பகலும் இரவுமாக கொட்டிய மழை பெருவெள்ளமாகி குடிசைகளை எல்லாம் அடித்து விழுத்திக்கொண்டு பாய்ந்தது.
போகிற நான் ஏன் சும்மா போகவேண்டும் என்ற குருட்டு நியாயத்துடன் வீதியோரம் ஒதுங்கிய மனிதர்களைக்கூட வாரியிழுத்து வீழ்த்தி தனக்குள் சுருட்டிக்கொண்டு பாய்ந்தது. பலபத்துப்பேர் வெள்ளத்திலும் மாண்டுபோனார்கள். பாரிய மரங்கள்கூட வேரோடு பாரி வீழ்ந்தன. அதுவும் தன் பங்குக்கு சிலரை கொன்றுபோட்டது.

Monday, January 23, 2012

தலைவர் பிரபாகரன் தொடர்-11

 





ன்னிக்கவேண்டும். நீங்கள் சாக அனுமதிப்பதற்கில்லை என்றார்’ பிரபாகரன்.
நான்கு பெண்களும் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நின்றிருந்தனர். நான்கு முகங்களிலும் நான்கு கோபங்கள். இதே உண்ணாவிரதம் கூடாது என்று அரசாங்கக் காவல் துறையினர் வந்து இழுத்துச் செல்வார்கள் என்றுதான்

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்

 

ழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம். மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.

Sunday, January 22, 2012

இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம் 01


 


என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின்உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன். வரலாற்றில்வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும்என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன்.

நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான்.எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன். இனி......

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

 

இன்றைய பூகோள அரசியலிலே, இரு சக்திமிக்க நாடுகளுக்குகிடையிலான உறவென்பதுவும், உறுதித் தன்மையென்பதுவும் பொருளாதரா நலன்களை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது. மாறாக அரசியல் என்பது பொருளாதாரத்துக்கு நிகராக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாக முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.
இது, நான்காம் கட்ட ஈழப்போரில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், ஈழத்தமிழர்களுடைய இருப்புக்கான போராட்டம் இனியும் உத்வேகத்துடன் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை, சமிஞ்சை. போராட்டம் என்பது தனித்து

Saturday, January 21, 2012

ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம்

  புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட,நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றஅவலங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராசா அண்ணன் அவர்கள்.

காற்று வெளியில் கத்தியை சுழட்டும் அப்துல் கலாம்

  பள்ளிக்கூடம் வியாபார நிறுவனமாக இருக்கக் கூடாதாம்…!

படித்தவன் பாவம் செய்தால் ஐயோ ஐயோ என்று போவானாம் – பாரதி சொன்னவை. நன்கு படித்து பாப்புலர் விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் ஆன டாக்டர் ஏ..பி.ஜெ.அப்துல் கலாம் இந்தியாவின் அறிவு ஜீவியாகவும்,

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 10 (இழப்புக்கள் வழி நம்பிக்கை பெறுவோம்)

 

s22_18442103ஆயுள் நிறைந்தவைகள் அனுபவவங்கள். முழுமையற்ற பூமியில் குடத்தில் தண்ணீர் அள்ளி, ஒவ்வொரு மிளகாய்ச் செடியின் அடிப்பகுதியிலும் ஊற்றிய அனுபவம், போதுமான வாய்ப்புக்களின்றி தடுமாறுகையில் கைகொடுக்கிறது. கல்லில் இடறிய காலில் இரத்தம் வந்தபோது எச்சிலால் மருந்திட்டோம். முன்னேறுவதற்கு எல்லாமே வாய்ப்பாகும் என்பதற்கு இன்று இதுவே முகவரியாகின்றது. பேச்சுக்குரலை ஒலிபரப்பாத

Friday, January 20, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 10

 

யிரத்தித் தொள்ளாயிரத்தி எண்பத்தி மூன்று என்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரை தேவதைகளாலும் சாத்தான்களாலும் ஒருமித்து சபிக்கப்பட்ட ஆண்டாக இருந்தது. எத்தனை அவலங்கள்! திரும்பிய பக்கமெல்லாம் கொலைகள், கொள்ளைகள், கலவரம். ஒதுங்க ஓர் இடமில்லாமல் மக்கள் ஊர் ஊராக ஓடிக்கொண்டிருந்தார்கள். வாழ்விடங்கள் இல்லாமல் போயின. பிள்ளைகளின் படிப்பு போனது. தொழில் போனது. உறவுகள், தொடர்புகள், சொத்து சுகங்கள், மேலான நிம்மதி அனைத்தும் இல்லாமல் போன வருடம் அது.

Thursday, January 19, 2012

1989-முதல்-1996-வரையான மாவீரர் தின உரைகள்

அன்பான உறவுகளே எமது விடுதலை போரட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை நாம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றோம் ..அந்த வகையில் எமது தமிழ் தேசியத்தின் தலைவரும் தமிழ் மக்களின் தந்தையும் ஆகிய தேசியத்தலைவர் அவர்கள் (89 ) முதல் (96 ) வரை ஆற்றிய மாவீரர் உரையினை ஒரே இடத்தில் தொகுத்து உள்ளோம் ..இந்த மாவீரர் தின உரையினை நீங்கள் செவிமடுப்பதன் முலம் சில உண்மைகளும் புரியாத புதிருக்கும் விடை காணலாம் ...தலைவர் அவர்களின் ஒவ்வொரு வருட உரையிலும் புதைந்து கிடக்கும் விடைகள்

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-7

 

ங்கோ சுற்றுலா சென்ற இடத்தில் ஐந்து நிமிடங் களோ, பத்து நிமிடங்களோ மனைவியைக் காணவில்லை என்றால், உங்கள் மனம் எப்படித் துடித்துப்போகும்? பொருட்காட்சித் திடலில் விரல் பிடித்து வந்த குழந்தை திடீரெனக் கூட்டத்தில் தொலைந்தால் உங்கள் மனம் எப்படியெல்லாம் பதைபதைப்பு அடையும்?
ஆனால், இன்று குடும்பமே திசைக்கு ஒன்றாகக் கிழிந்துகிடக்க, கணவன் எங்கே; மனைவி எங்கே; பிள்ளைகள் எங்கே என்று ஆண்டுக்கணக்காகத் தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது ஈழச் சமூகம். அதன் வேதனை எப்படி இருக்கும்?

பொப்பி மலரும் காந்தள் மலரும் ஒரு நோக்கு!

poppy-kaanthal

  இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே.

தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்?

 

இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்கள் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்கள், துணி, சிமெண்ட், மின்சாரம் போன்ற பலவற்றை

குட்டித் தீவில் குமுறல்கள் ……-05

தமிழரின் பலம் அழிக்கும், நிலப் பறிப்பு!

நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னர், விடுவிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது சுமார் 70,000 தமிழர்கள் வாழ்வதாகவும், அதே சமையம் அங்கு ‘பாது காப்புக் கருதி’(?!) நிலை கொண்டிருக்கும் ‘சிங்கள’ அரசபடையினரின் எண்ணிக்கையும் எழுபதாயிரத்தை எட்டும் எனவும் ,ஓர் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஒரு தமிழ்க் குடிமகனுக்கு ஓர் அரசுப் படையினரைப் பாதுகாவலாக அனுப்பி வைத்திருக்கும் இன்றைய இலங்கை அரசின் பெருந்தன்மையைப்(!) பாராட்டுவதா, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்னும் ‘போர்வை’யில்; முன்பு விடுதலைப் புலிகள் வசம்

Wednesday, January 18, 2012

நேற்று ஈழத்தில் தமிழினத்தை அழியவிட்டு வேடிக்கை பார்த்த தமிழகம் இன்று எட்டு தமிழர்களை காலடியில் கைவிட்ட கொடுமை!

  சொந்த ஊரில(புங்குடு தீவு) நிம்மதியாக வாழ முடியாது என்பதனை தமது வாழ்வில் உணர்ந்து கொண்டதனால் குடும்பத்தினருடன் தமிழகம் நோக்கி கடல்வழியாக படகில் சென்ற எட்டு ஈழத்தமிழர்களை நீதிமன்றக்காவலில் வைத்து இந்திய சட்டமும் தன் பங்கிற்கு வதைக்கின்றது என்றால் தமிழினத் தலைவர்கள் என்று சொலிலக் கொண்டு அரசியல் செய்பவர்கள் கண்டுகொள்ளாது இருக்கின்றமைதான் வேதனையினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.புங்குடு தீவுப் பகுதியில் வசித்துவந்த திருக்குமரன்(வயது29) என்பவர்

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 09 (வரலாற்றை மறக்காத இனத்திற்கு வெற்றி நிச்சயமே!)

 

நான் சென்றிருந்த ஊரில் தினமும் மாலையில் அங்கிருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினேன். திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய பிறகு அம் மறையுரையில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான சரியான விடையை அல்லது சரியான உணர்வுகளை வெளிப்படுத்துவோருக்கு திருவிழா நாளில் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 19ஆம் திகதி, இன்றைய கால சமூக வாழ்க்கைச் சூழலில் கறை படிவது எமது வாழ்க்கைக்கு உகந்ததா? என்று வினா தொடுத்தோம்.

Tuesday, January 17, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் -9

1984-ம் ஆண்டு இரண்டு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய விஷயம். சர்வ சாதாரணமாக எம்.ஜி.ஆர். அந்தத் தொகையைத் தன் சொந்த சேமிப்பிலிருந்து எடுத்துக் கொடுத்ததில் மலைத்துப் போனார் பிரபாகரன். இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்து பணத்தை எண்ணினார்கள். அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள். எண்ணி முடித்து எடுத்து வைத்தபோது விடிந்தே போயிருந்தது.
`தம்பி நேரில் வராததில் முதல்வருக்கு வருத்தம்தான்’ – பாலசிங்கம்

[குட்டித் தீவில் குமுறல்கள் -பகுதி-04]சட்ட சபையில் சரிபாதி இழந்தோம்!

ஈழப் போராட்டம், அரசியல் தளத்திலிருந்து ஆயுதப் போராக உருவான  1980 களின் ஆரம்பத்தில்  மலேசியாவில் எனது அரசியல் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன் என முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போது அந் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி…
” ஏன் சார் நீங்கள் இலங்கையில் சிங்களவர்களுடன் போரிட்டுக் கொள்கிறீர்கள்…? நாங்கள் இங்கு வாழ்வது போல் நீங்களும் அவர்களுடன் சேர்ந்து வாழலாம்

Monday, January 16, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-6

 

ன அழிப்பு அரசாங்கம், கொடிய மனம்கொண்டு தன் மக்களை அழிப்பதையே தொழிலாகக்கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணம், மெனிக் ஃபார்ம் முகாம்!
ஹிட்லரின் இன அழிப்புச் சித்ரவதை முகாம்களுக்கும் ராஜபக்ஷேவின் சித்ரவதை முகாம்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. ஹிட்லரின் கொடுமைகளை அறிந்துகொள்ள, அன்றைய சித்ரவதைக் கூடத்தில் வதைபட்ட கதை ஒன்றை அறிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.
சித்ரவதை அடக்குமுறைத் தாக்குதலால், அந்தப் போராளியின் நாடித் துடிப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், சித்ரவதைக்குத் தலைமை ஏற்று

Saturday, January 14, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 8

 


என்ன நடக்கிறது இலங்கையில்? யார் இந்த இளைஞர்கள்? தமிழகத்தில் என்ன செய்கிறார்கள்? இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே? பண உதவி செய்கிறதாமே? உண்மையா? எப்படிச் செய்கிறார்கள்? ரா (RAW) மூலமாகவா? யார் பொறுப்பு?
எம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு

தந்தை செல்வா, அன்றே சொன்னார்….![ குட்டித்தீவில் குமுறல்கள்....... பகுதி-03]

“சர்வசித்தன்”

உலகப் பற்றினை உதறித் தள்ள முற்படும் ஞானியர் கூடத் தம் தாயின் மீதுள்ள பாசத்தைக் கைவிட இயலுவதில்லை!
ஆதிசங்கரரில் ஆரம்பித்துப் பட்டினத்தடிகள் வரை இந்த வரலாற்றைக் காணலாம்…..
இறைவன் மீது பக்தி கொண்டு,  அவனது புகழ்பாடித் திரிந்த இறை அடியார்கள் கூட, அந்த இறைவனைப் போற்றும் போது……
“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே….” என்றும்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 





http://4.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TSJlJfCyINI/AAAAAAAAFUA/KkLWkcGLaCo/s1600/Tamil%2Bnew%2Byear.JPGஎமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)

 

குழந்தைகளின் உலகம் உன்னதமானது. கத்தி ஆர்ப்பரித்தாலும் கண்ணீரின்றி அழுவார்கள். அன்போடு அழைக்கும் பகைவர்களையும் நம்பிச் செல்வார்கள். கொஞ்சமாய் இருந்தாலும் நெஞ்சம் நிறைந்து மகிழ்வார்கள். சின்னச் சின்ன கீறல்களையும் தடுமாற்றங்களையும் மறந்து உற்சாகம் தருவார்கள். மழலை மொழியில் இறைவனின் குரலொலி இசைப்பார்கள். குழந்தைகள் இருந்தால் இரைச்சல் இன்னிசையாகின்றது. சிந்தும் உணவுகள் ரங்கோலியாகின்றது. அவர்களது சேட்டைகள் கூட நகைச்சுவை நாடகமாகின்றது.

Friday, January 13, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 7



உடனே சென்னைக்குச் செல்லவும்..

யாழ்ப்பாணத்திலிருந்து அந்த ஒரு வரி உத்தரவு லண்டனில் இருந்த பாலசிங்கத்துக்குச் சென்றபோது, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பிரபாகரனுக்கு அறிமுகமாகி வெகுகாலம் ஆகியிருக்கவில்லை. படித்தவர், யோசிக்கத் தெரிந்தவர், அரசியல் தெரிந்த அளவுக்குத் தத்துவம் அறிந்தவர், மார்க்ஸியம் புரிந்த அளவுக்கு மனித மன ஆழங்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர், இயக்கத்துக்கு சித்தாந்த ரீதியில்

Thursday, January 12, 2012

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை!-02

 மகாவம்சமும்; மகிந்தவின் தமிழினத் துவம்சமும்!

“சர்வசித்தன்”
சுதந்திர இலங்கையின் ஒன்பதாவது வருடத்தில் (1957 ல்); ஈழத்தமிழர்களது அரசியல் கோரிக்கைகளில் சிலவற்றையேனும் வழங்கும் வகையில்; தமிழர்களது தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்; அதிக தொகுதிகளில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன், ஓர் உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகா.

கப்டன் பண்டிதர் வரலாறு

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் அத்திவாரத்தின் ஒரு தூன் .கடமையுணர்வு கடும் உழைப்பு இலட்சிய பற்று என்பவற்றோடு தமிழ் மொழி மீதும் பண்பாட்டின் மீதும் அளவுகடந்த பற்று கொண்டவர் அதையும் கடந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் துணைத்தளபதியாக அல்லும் பகலும் செயற்பட்ட வீர மறவன் "கப்டன் பண்டிதர்"

""பண்பாட்டுக்கு இசைவாக பண்பாடு தமிழிசை பண்பாடு.தமிழன் வரலாற்று வரிகளையே நீ பாடு வீர வரலாற்று வரிகளையே நீ பாடு"""

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -5

 

முள்ளி வாய்க்காலில் இருந்து தன்னந்தனியாக தனது ஆண் குழந்தையைச் சுமந்து வரும் பெண்ணுக்கு அவளது குழந்தையைப் பாதுகாப்பது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. யாராவது காப்பாற்றி குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க மாட்டார்களா என்று அலை பாய்கிறாள். ஆனால்,  குழந்தையைப் பிரித்து அனுப்ப, அவள் மனம் ஒப்பவில்லை. இத்தனை நாட்களாக, தான் அடைந்த துன்பங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம். அந்த நேரத்தில் முள்வேலிக்கு அப்பால் இரண்டு கண்கள் தன்னையே

Wednesday, January 11, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 6

ரியான இருட்டுக் காடு. யாரும் அத்தனை சுலபத்தில் பொடிநடை யாக உள்ளே வந்துவிட முடியாத அளவுக்கு அடர்த்தியும் அபாயங்களும் நிறைந்த காடு. அபாயத்தில் பெரிய அபாயம், கால் வைக்கும் இடங்கள். அடடே காய்ந்து கிடக்கிறதே என்று அடியெடுத்து வைத்தால் அப்படியே உள்ளே போய்விட வேண்டியதுதான். புரையோடிய சதுப்பு நிலம். மேலே தரை போலவும், கீழே பல அடி ஆழத்துக்குச் சேறுமாகப் பல இடங்களில் இருக்கும். சுற்றிலும் கனத்த மரங்கள். முட்புதர்கள். என்னவென்று

Tuesday, January 10, 2012

நீங்கள் இன்னுமொரு முறை இதை கேளுங்கள் கடைசியுத்தம் பற்றி

கடைசி யுத்தம் பற்றி மீண்டும் ஒரு முறை நீங்கள் கேட்பது சிறந்த ஒன்று .இப்பொழுது தாயாக விடுதலைப் பணி முற்றுமுழுதாக புலம்பெயர் மக்களிடம் ஒப்படைக்க பட்டு உள்ளது ..தாயகத்தில் முள்ளு கம்பிகளுக்கு பின்னால் நின்று ஏக்கத்தோடு உக்களை பார்க்கும் தொப்பிள்கொடி உறவுகளின் துயர்துடைக்க புலம்பெயர் உறவுகளே தயாராகுங்கள் ..தலைவன் வருவான் துயர் விடுங்கள் ..உங்களிடம் ஒப்படைக்க பட்டுள்ள பொறுப்பினை செவ்வனவே செய்ய உறுதியெடுங்கள்

உப்பில் உறைந்த உதிரங்கள் ஈழ திரைப்படம்


யாழ் கிளாலி கடல்நீரேரி பகுதியில் (26.02.1998 ) அன்று தரித்துநின்ற நீருந்து விசைப்படகை "கடல் கொமாண்டோக்கள் "உடுருவி கைப்பற்ரிவரும் நோக்குடன் சென்ற திட்டம் நிறைவேறாத சந்தர்பத்தில்
அந்த நீருந்து விசைப்படகிர்க்கு என்ன நடந்தது? மீண்டும் அத்திட்டத்திற்கு அமைய கடற்படை தளத்தினுள் வெற்றிகரமாக நுழைந்து விசைப்படகை கைப்பற்றுகின்ற
உண்மை சம்பவத்தை தழுவியதாக அமைகின்றது இத்திரைப்படம்.யாழ் கிளாலி கடல் நீரேரியில் வீரகாவியமான கடல் மறவர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் ..

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை-1

தொடரினுள் புகு முன் சில வார்த்தைகள்…..

[சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், மலேசியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் “குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் ஈழத் தமிழர்களது அரசியல்-ஆயுதப் போராட்டம் குறித்த எனது கட்டுரைத் தொடர் வெளியாகி இருந்தது. 1986 ஆம் ஆண்டு அது ,நூலாகவும் வெளியீடு கண்டது.

Monday, January 9, 2012

கடலோர காற்று முழுநீள ஈழ திரைப்படம்


கடற்புலிகளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி கடற்புலிகள் நிதர்சனம் இணைந்து தயாரித்து .(2002 ) ஆண்டில் வெளிவந்த கடலோர காற்று முழுநேர திரைப்படம் ..இது திரைப்படம் மட்டுமல்ல ஈழ தமிழ் மக்களின் வலிகளை சுமந்த வரலாறும் என்றும் சொல்லாம் ..வரலாறுகள் மீட்டி பார்க்கவேண்டியது எமது கடமை ..எமது மக்களினதும் போராளிகளினதும் வலிகள் சுமந்த வாழ்வினை காணுங்கள்

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -4


சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம்

Sunday, January 8, 2012

கிட்டு மாமா நினைவில் இணைந்திருப்போம்


கிட்டு மாமா. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் பரவும் உணர்வலைகளை விவரிக்கவோ, மகிழ்ச்சி, துக்கம், ஆதங்கம், கோபம், ஆற்றாமை, ஏமாற்றம், இன்னும் என்னென்ன என்று இனம் பிரிக்கவோ இயலவில்லை. அவர் என் வாழ்வில், என் மனதில் பதித்திருக்கும் தடம் அத்தனை ஆழமானது.

அவரை முதன் முதலில் நான் கண்ட போது எனக்கு 7 வயதிருக்கும். தலைவர் பிரபாகரன் மாமா மதுரையில் தங்கியிருந்த போது அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர் பின்னே மற்றுமொரு வரும் வருவார். ஆனால் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நிற்பார். பின்னர் தலைவர் மாமா கிளம்பும் போது அவரும் பின்னேயே செல்வார். அவரை நான் கவனிக்கும் சூழல் ஏற்பட்டதில்லை.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 7 (தோல்வி அல்ல தொய்வு)

 

மீண்டும் என் அலைவரிசைக்கே என் மனம் வந்தது. விரைவாக விசாரணை செய்துவிட்டு இன்றைக்கு விட்டு விடுவான் நாளைக்கு விட்டு விடுவான் என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் போன முதல் மாதத்தில் ஒரு விசாரணை செய்த பிறகு மீண்டும் 2010 மார்கழி மாதம் தான் இரண்டாவது விசாரணை செய்தார்கள். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏன் எங்களை வைத்திருக்கிறான் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறான் என்று நினைத்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை. மூளை மரத்துபோனதுபோலதான் இருந்தது.

Saturday, January 7, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 5

 

‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை