வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, October 8, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-12


விடுதலைபுலிகளின் வழிகாட்டி அணிகள் முன்னாலே நகர்கின்றது .எதிர்பார்த்தது போன்று கொழும்பு வீதியில் தாக்குதல் தொடங்குகிறது.இது ஒரு வழமைக்கு மாறாக கடுமையான தாக்குதலாக இருந்தது.ஒருசில அணிகள் பாதைய கடந்து விட்டன மேலும் சில அணிகள் பாதைய கடக்கவேண்டியுள்ளது.இவர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ஏனைய அணிகள் எதிரி மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எதிரி உக்கிர தாக்குதலை இவ்விடத்தில் நடத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் நேரடி சண்டைகளை தவிர்த்து அப்பகுதி எங்கும் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.


அத்துடன் தாக்குதல் உலங்கு வானுர்திகளும் அவ்விடத்திற்கு வந்து கடுமையான தாக்குதலை நடத்த தொடங்கின.மிக மோசமாக நடத்தபட்ட தாக்குதலில் சிக்கிய போராளிகளின் அணி காட்டில் சிதறுகிறது.அதாவது தனித்தநியவும் குழுக்களாகவும் காடுகளுக்குள் பிரிந்துவிடுகிறார்கள்.தாக்குதல் சற்று ஒய்வு நிலைக்கு வந்தபின்னர் வழிகாட்டி போராளிகள் வேகமாக செயற்பட்டு போராளிகளை தேடிபிடித்து ஒன்றிணைத்தார்கள்.அன்துடன் இந்த தாக்குதலில் போராளிகள் பலர் காயமடைந்தும் சிலர் வீரச்சாவை அடைந்தும் இருந்தார்கள்.வீரச்சவடைந்தவர்கள் அருகிலுள்ள இடங்களில் விதைக்கபடுகிரார்கள்.காயமடைந்தவர்களை காவிக்கொண்டு வன்னிசெல்லும் அணி

கொழும்பு வீதிய கடந்து வன்னி செல்லும் காட்டுக்குள் நுழைகிறது.வன்னி செல்லும் காட்டிற்குள் நுழைந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று அர்த்தமில்லை வடக்கில் இருந்து கிழக்கிற்கும் கிழக்கில் இருந்து வடக்கிற்கும் தரைவழியாக பயணம் செய்வது என்பது மிகவும் நீண்டதும் உயிராபத்து மிக்க பயணமிது போகும் போது கொண்டுசெல்லும் தண்ணீர் முடிவடைந்து ஒரு கட்டத்தில் குடிக்க நீர் கூட இருக்காது.உணவு தீர்ந்து போயிருக்கும் ஆனாலும் தொடர்ந்து நடக்கவேண்டியிருக்கும் போகும் போதே பல போராளிகள் நீரின்றி மயங்கி விடுவார்கள்.சிலர் நடக்க முடியாமல் தளர்வடைந்து விடுவார்கள் அத்துடன் இந்த பயணத்தில் ஒரு போராளி தனக்குரிய துப்பாக்கி ரவைகள் உடைகள் இவற்றுடன் மேலதிகமாக சில பொருட்கள் அத்துடன் காயமடைந்த போராளிகளையும் சுமந்துகொண்டுதான் செல்லவேண்டும்.
இடையில் பெரிய பெரிய ஆறுகளையும் கடக்க வேண்டும்.அத்துடன் எதிரியின் நடமாட்டங்களையும் அவதாநித்துகொண்டே பயணம் செய்யவேண்டும்.என்பதால் காட்டினுள் பயணம் என்பது மிக மெதுவாகத்தான் இருக்கும் அடர்ந்த காட்டில் சில மைல்கல் நகர்வது என்பது பெரும் பாடக இருக்கும்.இந்த நீண்ட பயணத்தின் போது உடனடியாக சிகிச்சை வழங்க முடியாது.காயமடைந்த போராளிகளில் சிலர் வீரச்சாவு அடைந்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.அவ்வாறு வீரச்சாவு அடைந்தாள் அவர்களை அவ்விடத்திலையே மரியாதையுடன் விதைத்துவிட்டு பயணம் தொடரும்.இவ்வாறுதான் அன்று மட்டகிளப்பில் இருந்து பெரும் அணியொன்று சில முக்கிய தளபதிகள் பொறுப்பாளர்களுடன் வந்தபோது இந்த சண்டை வெடித்திருந்தது.சண்டைய முடிந்துகொண்டு காட்டு வழியாக நடந்து புல்மோட்டைக்கு அருகில் கொக்குதொடுவாய்க்கு இடையில் ஒரு கடற்கரைய வந்தடைந்தது.அந்த இடத்தில் சில வேளைகளில் சிறிலங்கா படையினருடன் சண்டையிட வேண்டிய சுழல் வரும் என்பதால் போராளிகள் அதற்கான தயார் நிலையிலே நின்றிருந்தார்கள்.முல்லைத்தீவில் இருந்து கடற்புலிகளின் படகு அணிகள் அங்கு வரவேண்டியிருந்தது.அவர்கள் வந்தே கடல்வழியாக வன்னிக்கு செல்லமுடியும்.நாயர்ருக்கு அண்மையாக செம்மலை அளம்பில் கடற்பகுதியில் கடற்புலிகளின் பாரிய தளம் ஒன்று இருந்தது.இந்த தளம் இருப்பது யாருக்கும் அன்று பெரிதாக தெரிந்திருக்கவில்லை.இது மிகவும் இரகசியமாய் விடுதலை புலிகளால் பேணப்பட்டு வந்தது. இங்கு கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு கருவி பொருத்தபட்ட ராடார் தளம்குட இருந்தது .இங்குதான் கடற்புலிகளின் தாக்குதல் அணியுடன் கரும்புலி படகுகள் களம் நோக்கி விரையும்.புல்மோட்டைய அண்மித்த கரைய விடுதலைபுலிகளின் மட்டகிளப்பு அணி வந்துவிட்டது என்ற செய்தி தொலைத்தொடர்பில் பரிபசையில் இத்தளத்திற்கு எடுத்து குறப்பட்டது.இதைனையடுத்து கடற்புலிகளின் படகு அணிகள் கடலில் இறக்கபட்டன.கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கிவிட்டதையும் திருமலை நோக்கி அவை நகர்வதையும் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையாக ராடாரில் அவர்கள் கண்காணித்து விடுவார்கள்.அத்துடன் மனித்தியலத்திற்கு இரண்டு டோற என்ற வீதம் காங்கேசன்துறைக்கும் -திருமலைக்கும் இடையே சுற்ருகவல் இடம்பெற்று கொண்டிருக்கும்.இவர்களின் கண்களில் சிக்குபடாமல்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு கண்டாலும் கடற்புலிகளின் பெருமளவு படகுகள் படகுகள் அணிகளை கண்டால் சிறிலங்கா கடற்படை படகுகள் நெருங்கிவராது.அவ்வாறு நெருங்கி வந்தால் அது தற்கொலைக்கு சமமானது என்பது அவர்களுக்கு தெரியும்.இவ்வாறன சம்பவங்களில் பலவற்றில் தமது டோராக்களையும் கடற்கலங்களையும் இழந்த அனுபவம் சிறிலங்காவுக்கு உண்டு.எனினும் சில வேளைகளில் கடற்சமர் வெடித்துவிடும் திருமலையில் இருந்து சிறிலங்கா கடற்படையின் டோற படகுகள் தாக்குதலுக்கு வரும்.கொக்குதொடுவாய் புல்மோட்டை வரையான கடற்பரப்பில் இரு தரப்பின் இடையே கடும் சமர் நடைபெறும்.என் கரும்புலி படகுகள் கூட இதன்போது வெடிக்கும்.டோற படகுகள் முள்கடிக்கபடும்.இவ்வாறுதான் சிறிலங்கா கடற்படையினருடன் மோதி கடற்புலிகளின் படகுகள் அந்த பகுதிய வந்தடைய முடியும்.அதே வேலை இவர்கள் படகில் ஏறும்போது கூட கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் ஒருபுறம் சிறிலங்கா கடற்படைய துரத்தி துரத்தி அடித்துக்கொண்டு இருப்பார்கள்.படகில் ஏறியவர்கள் செம்மலை அளம்பில் கடற்கரையில் கொண்டுசென்று இறக்கபடுவார்கள்.இறங்கும் இடங்களை கடற்படையினர் அறிவித்தால் அவ்விடத்திற்கு சிறிலங்கா வான்படை கிபீர் விமானங்கள் வந்து தாக்குதலை நடத்தும்.இவற்றை எல்லாம் எதிர்கொண்டுதான் மட்டகிளப்பில் இருந்து போராளிகள் வன்னிய வந்தடைகிறார்கள்.குடும்பிமலை கரடியனாறு குறிப்பாக சில முதன்மை இடங்களை பிடித்த சிறிலங்கா படையினர் சிங்க கொடிகளை அங்கு ஏற்றி குதுகலித்து மகிழ்ந்தார்கள்.கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண் மீட்க பட்டுள்ளதாக (2007 ) இன் இறுதி பகுதியில் சிறிலங்கா அரசு அறிவிக்கிறது.படுவான்கரையில் சில இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுகின்றார்கள்.தாண்டியடி பிரதேசம் சுதந்திரபுர என சிங்கள பெயர் மாற்றபட்டது குறிப்பிடத்தக்கது.இதே வேளை மட்டகிளப்பில் படையினரால் ஆக்கிரமிக்கபட்ட நிலையில் அங்கு நின்று போராடிய ஏனைய போராளிகள் அம்பாறை மாவட்ட போராளிகளுடன் இணைந்து கொள்கிறார்கள்.போராளிகளில் சிலர் விலகி தங்களின் வீடுகளுக்கு செல்கிறார்கள்.இவர்களை அடையலாம் கண்டு பின்னர் கைய்துசெய்த்து இவர்கள் முலம் விடுதலைபுலிகளால் புதைக்கபட்ட ஆயுத தளபாடங்கள் சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள்.சில இடங்களில் சில தொழில்நுட்ப கருவிகளை கொண்டு ஆயுதங்கள் புதைக்க பட்டிருப்பதை இனம்கான்கிறார்கள்.இவ்வாறு படுவான்கரையில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மோட்டர்கள் என்பன படையினரால் எடுக்கபட்டு சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையதளத்தில் ஒளிப்படங்கள் முலம் கண்பிக்கபட்டு இருந்தது. சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்க பட்ட படுவான்கரை பகுதியின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா ஊர்காவல் படையினரும் காவல் துறையினரும் முகாம்களை அமைக்கிறார்கள்.கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மட்டகிளப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா படையினரின் சிறப்பு அதிரடி படையினரே பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.இவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்பது இவர்கள் நடத்திய பல்வேறு படுகொலைகள் முலம் அறிந்திருந்த தமிழ் மக்கள் இவர்களது கட்டுபாட்டில் தங்கள் இருப்பது என்பது ஆபத்து என்பதை உணருகின்றார்கள்.அதே வேளை படுவான்கரையில் பாதுகாப்பில் உள்ள சிங்கள ஊர்காவல் படையினர் தமிழ் மக்களின் சொத்துக்கள் உடமைகளை சூறையாடி தமது கிராமங்களுக்குள் எடுத்து சென்றார்கள்.தமது உடைமைகள் பறிபோனபோதும் அவற்றை பார்த்துகொண்டிருக்க வேண்டிய நிலைமை அங்கிருந்த தமிழ் மக்களுக்கு இருந்தது என் படையதிகாரிகள் கூட தமிழ் மக்களின் சொத்துக்களை வாகனங்களில் ஏற்றி தங்களிடங்களுக்கு கொண்டுசென்றதும் நடந்தது.இவ்வாறுதான் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண்ணை வல்வளைப்பு செய்து வெற்றி கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரசு நின்றது.அதன் அடுத்த இலக்காக இருந்தது அம்பாறை.( தொடரும் )


முள்ளிவாய்கால் போரில் அறியப்படாத உண்மைகள்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை