வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, November 15, 2011

தேசிய தலைவரை புரிந்து கொள்ளுதல் -பாகம்-2

அந்த ஒற்றை மனிதனே இந்த விடுதலை போராட்டத்தை துக்கி நிறுத்தி அதனை தாங்கி நிற்கும் தோள்களுக்கு உரியவர்.உன்னதமான இந்த போராட்டத்தை வெறும் சாகசமாகவே வீர விளையாட்டாகவே அவர் ஆரம்பிக்கவில்லை.உரிமை மறுத்தலுக்கு எதிராகவும் எழுச்சியாகவும் சுகந்திரமாக வாழும்,மானிட எத்தனமாகவும்,ஆயுதம் மூலமான ஒடுக்குதலுக்கு இயல்பாக வெடிக்கும் எதிர்வினையாகவே அவரின் போராட்டம் ஆரம்பித்தது.இந்த போராட்டத்தினை அவர் ஆரம்பித்த நாளிலிருந்து அதன் இயங்கு திசையை தீர்மானிக்கும்
சக்த்தியகவும்,ஒன்றிணைக்கும் ஒரே குறியீடாகவும் அவரே இருக்கிறார்.இதற்க்கான ஆற்றலையும் அறிவையும் அவர் எங்கிருந்து பெற்றுகொண்டார்?அனுபவம் என்ற அற்புதமான பாடத்திலிருந்தே நிறைய பெற்றுகொண்டார்,காலம் காலமாக அடக்கபட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான ஒரே தலைவர் என்ற முறையில் அந்த போராட்டம் சந்தித்த அனைத்து தேக்கங்களையும்,சவால்களையும்,வளைவுகளையும்.அவர் அதிசியக்க விதத்தில் விடுதலைக்கு சாதகமாக்கி முன்னெடுத்தார்.


ஒப்புவமை இல்லாத தலைவர் என்ற முறையில் அவர் தான்  கற்றுகொண்ட பாடங்களை,அனுபவங்களை ,நீதியை,ஒழுக்கத்தை,உறுதியை என்ற அனைத்தையும் ,தனது தோழர்களுக்கு தளபதிகளுக்கு கற்பித்தார்.தான் கற்றுகொண்ட பாடத்தை மற்றவர்களுக்கு தனது நடைமுறை முலமும்,செயலின் முலமும் சொல்லி கொடுத்தவர் தேசிய தலைவர்.அவர் பார்க்கும்,கேட்க்கும்,அறியும் அனைத்திலிருந்தும் கற்றுகொண்டார்.பெற்றுகொண்டார்,தேசியத்தலைவர் கற்றுகொண்ட முதலாவது பள்ளி கூ டமும்,பல்கலைக்கழகமாகவும் அவரின் தந்தையே இருந்தார்.சில நாட்களுக்கு முன்னர் சிங்கள சிறை ஒன்றிலே மரணமாகிய அவரின் வாழ்வும் வளமையும்,பழக்கவழக்கங்களும் நேர்மையும்,ஓர்மமும்,தலைவரின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் அற்புதமானவை ஆழமானவை.அமரர் வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் மிகவும் எளிமையானவராகவும்,அதே நேரம் உறுதி மிக்கவராகவும் இருந்தவர்.

கடல்களை பிளந்து  தேச எல்லை கடந்து  சென்று தொழில்செய்யும் கப்பல்களை சொந்தமாக கொண்டும் செல்வசெழிப்பு மிக்கதுமான குடும்பத்தில் முத்த வாரீசான வேலுப்பிள்ளை அப்பா அவர்கள் தனது குடும்ப சிறப்புகள் எதுவும் தனது நிதி இருப்புக்கள்,நில இருப்புக்கள் ஏதுவின் தாக்கமும் இன்றி மிக இயல்பாகவும் எளிமையாகவும் வாழ்ந்தவர்.முகவும் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தின் தலைமகனான வேலுப்பிள்ளை அப்பா அவை அனைத்தையும் உதறியவராக உலா வந்தவர் .மிகவும் மெதுவாக நடக்கும் பழக்கமுள்ள அவர் மிகவும் உன்னிப்பாக பார்வையை பதித்தபடியே நடைபோடும் அவரின் அந்த பழக்கமே தலைவரின் இயல்பான எந்த நேரமும் பார்வையை கூ ர்மையாக வைத்திருப்பதாக வந்திருக்கலாம்,தேசிய தலைவரின் புத்தகங்கள் மீதான தேடல்  கூட அவரின் தந்தையிடம் இருந்து வந்ததுதான்.தேசியத் தலைவர் தனது தந்தையை ஆழமாக புரிந்து கொண்டவர்.தனது தந்தையின் ஆளுமைகளை அவரின் புரிந்து  கொள்ளுதல்  உடாகவே தலைவர் உள்வாங்கினார்.சின்னஞ் சிறு  மழலை தனது தந்தையை பார்த்தே நடக்க பயில்வதை போன்றே தலைவரும் தனது தகப்பனாரின் இயல்புகளை தனதாக்கினார்.

அவருடைய எளிமை,அவருடைய நேர்மை,அவருடைய உறுதி,அவருடைய பார்வை என்றே எல்லாமே.தேசிய தலைவருக்கு அவர் வளர்ந்த பின்னர் நிறைய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் கிடைத்திருக்கலாம்.அனால் என்னைபோருத்தவரையிலும் தேசியத்தலைவருக்கு கிடைத்த முதலாவது நண்பராக அவரின் தந்தையே இருந்திருக்கிறார்.இதனை நிறைய இடங்களில் தலைவர் சொல்லியிருக்கிறார்.ஒரு நண்பனுக்கு அறிவுறுத்துவது போலவே வேலுப்பிள்ளை அப்பா எல்லா விடையங்களையும் தோழமையுடன் தனது மகனுக்கு சொல்லி கொடுத்தார்.தனக்குள்ளே யாகம் வளர்க்கும் அதிஉயர் ஞானத்தை கூடதந்தையிடம் இருந்தே தனக்குள் பெற்றவர் தலைவர்.இவை எல்லாவற்றையும் விட வேலுப்பிள்ளை அப்பாவிடம் இருந்த பொங்கிவரும் சத்திய ஆவேசம்தான் தலைவர் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கற்றுகொண்ட அதியுச்ச பாடமாகும்.அந்த சத்திய ஆவேசம்தான் விடுதலை போரட்டாமாக பிறப்பெடுத்தது.


தன்னுடைய  ஒரு பிரதியாக ஒரு இனத்தின் விடுதலை போராட்ட தலைவனை உருவாக்கிய அந்த தந்தை என்றும் நினைவு கூறத்தக்க ஒரு பரிமாணம்.இப்படியாக தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட இயல்புகளையும்,தானே பெற்றுக்கொண்ட அனுபவங்களையும்,தலைவர் தனது தோழர்களுக்கு கற்பித்தார்.அந்த வகையில் தலைவர் எப்படி தனது தந்தையை அணு அணுவாக தனக்கும் உள்வாங்கினாரோ அப்படியே கிட்டு என்ற உன்னத தளபதியும் தலைவரை அணு அணுவாக தனக்குள் உள்வாங்கி தனது ஆத்மத்தை வளர்த்தவர்.போர்குணத்தை கூர் தீட்டியவர் இந்த சனவரி (16  ) ஆம் திகதியுடன் அவர் வீரமரணம் அடைந்து ( 19    ) ஆண்டுகள் ஓடிவிட்டன தேசியத் தலைவரின் ஆளுமைகளை முழுமையாக தரிசிக்க விரும்பும் எந்தவொரு மனிதனும் தேசியத் தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையில் எந்த நேரமும் ஓடிக்கொண்டு இருந்த கண்ணுக்கு தெரியாத உணர்வலைகள் பற்றியும் புரிதல்கள் பற்றியும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

தலைவருக்கும் கிட்டுவுக்கும் இடையிலான உறவு என்பது தலைவர் -போராளி,தலைவர்-தளபதி என்ற பொறுப்பு நிலைகளை எல்லாம் கடந்த ஒரு உன்னத நிலமையிலானது.தேசியத் தலைவர் சொல்லுவது போல,ஒரே இலட்சியம் ஆழமாக வரித்துக்கொண்ட இருவருக்கு இடையிலான ஆன்ம உறவு ,அது ,ஒரு கோபக்கார போராளியாக போராட்டத்துக்கு வந்த குமார் என்ற அந்த பெடியனை செதுக்கி செதுக்கி எல்லா ஆளுமைகளும் நிறைந்த அதி மானுடனாக மாற்றியவர் தலைவர்தான்.தான் தனது தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட அமைதியான உறுதி ,உறுதி நிறைந்த அமைதி என்பவற்றை கிட்டுவுக்கு சொல்லி சொல்லி அவரை நிதானாமான உறுதியான வீரனாக்கினார்.முகாம்களில் இருந்து இராணுவம் வெளிவந்து விட்டது என்ற போதிலும் கடற்கரையால்  நேவி படகின் முலம் இறங்குகின்றான் என்ற நிலையிலும் ஏன் சுதுமலையில் தனது முகாம் உலங்கு வானுர்தியால் வந்திறங்கிய சிங்களபடையால் சுற்றி வளைக்கபட்ட போதிலும் கிட்டு நிதானமாக மிக வீரமுடன் உறுதியாக நின்ற பொழுதுகளும்,இறுதியும் இறுதியான அந்த கடைசி நாளான சனவரி (16   ) அன்று வங்கக்கடலில் இந்திய கடற்படை சுற்றி நின்று சரணடைய சொல்லி வற்புறுத்திய போதிலும் அதே நிதானத்துடன் தனது காலை இழுத்து இழுத்து நடந்து ஒவ்வொரு இடமாக பார்த்து பார்த்து படகு முழுவதும் சக்கை வைத்த உறுதியும் .மரணித்த நிமிடம்வரை காட்டிய அமைதியும் தலைவர் சொல்லிதந்தவைதான்.

கிட்டுவும் தேசியத் தலைவரை போன்றே தேடல் மிகுந்த ஒரு மனிதன் புத்தகம் என்றாலும் சரி ,சக மனிதனின் அனுபவங்கள் என்றாலும் சரி ,திரைப்படம் என்றாலும் சரி தலைவர் எப்படி அவற்றை உள்வாங்குவாரோ அப்படியே கிட்டுவுக்கும் சாத்தியமானது,வேட்டை துப்பாக்கிக்கு மின்னி வைப்பதிலிருந்து தான்பிரின் என்ற அயர்லாந்து போராளியின் வரலாறு வரைக்கும் ,சக்கை அடைக்கும் முறையிலிருந்து சனங்களுடன் வேலைசெய்யும் முறைவரைக்கும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து கிட்டுவுக்கு கற்பித்தவர் தலைவர்தான்.தனது படிப்பினைகளை தனது வரலாற்றிலிருந்தே பெற்றுக்கொண்ட தலைவர் தன்னை போன்ற ஓர்மமும் ஒழுக்கமும் வீரமும் வழிகாட்டும் திறனும் தனது தளபதிகளுக்கும் அவர்களினுடாக போராளிகளுக்கும் பரவ செய்தார்.இதுவே ஈழ தமிழினத்தின் எழுச்சியானது. ஆளுமைகளினதும் உணர்வுகளினதும் நீட்ச்சிதான் .இந்த உணர்வுகளும் ஆளுமைகளும் இருக்கும் வரை எமது விடுதலை போராட்டத்தை எவராலும் பிடுங்கி எறிந்துவிட முடியாது.ஏனென்றால் இது தலைமுறை தலைமுறையாக கண்ணுக்கு தெரியாத அலையாக எமது மக்களுக்குள் பிறப்பெடுத்து வருகின்றது.

""நாமும் கற்று கொள்ளுவோம் வாழ்வின் இறுதி நாள்வரைக்கும் தேடுவோம் ,,இன்னும் நிறைய கற்று கொள்ளுவோம் தேசிய தலைவரிடம் இருந்து

நன்றி- ச.ச.முத்து

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை