வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, November 9, 2011

தேசிய தலைவரை புரிந்து கொள்ளுதல்

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது தேசிய தலைவரின் பிறந்ததினம் அண்மித்து இருக்கலாம்.அல்லது கடந்து போயிருக்கலாம்.எது எப்படியாயினும்  அவர் என்றென்றும் இந்த ஈழத் தமிழினத்தால் நன்றியுடனும் உணர்வுடனும் உள்ளத்து ஆழத்திலிருந்து.நினைக்கப்பட வேண்டியவர் அவரை புரிந்துகொள்ள வேண்டுமானால் ,தேசிய தலைவரை முழுமையாக தரிசிக்க வேண்டுமானால் அதற்க்கு உரிய குறைந்தபட்ச தகுதி அல்லது தேவை என்னவென்றால் விடுதலையும்  தேவையும் ,சுகந்திரத்தின் அருமையும் உணர்ந்துகொள்ளகுடிய ஒருவராக இருந்தால் மட்டுமே. மானுட விடுதலையை யாசிக்கும் எவரும் வாழும் அவரின் வரலாற்றறி நேர்மையாகவும் உண்மையாகவும்
புரிந்துகொள்ள முடியும்.மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே சுகந்திரத்தை உணர்ந்து கொள்ளுவதும் உணராததும் ஆகும்.

சுகந்திரம் என்ற உன்னதத்தை வேண்டிநிற்கும் கோடனா கோடி  மக்களுக்கு தேசியத்த தலைவரின் வரலாறு ஒரு யாகம்!ஒரு வழிகாட்டி!எல்லாவற்றிலும் மேலாக அவரின் வரலாறு தோழமை நிரம்பிய ஒரு அரவணைப்பு .தேசியத் தலைவரை  பற்றி ஒரு வார பத்திரிக்கையிலோ எழுத முனையும் ஒருவனுக்கு நிறைய சங்கடங்களை அவரின் வரலாறு ஏற்படுத்தும்.ஏனெனில் அவரின் வரலாறானது ஓரிரண்டு பக்கத்தினுள் அடக்கி சுருக்கி எழுதக்கூடிய ஒன்றல்ல.அவரின் வாழ்வு என்பது ஒரு தனிப்பட்ட ஒரு பிரபாகரனின் வாழ்வு அல்ல அது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் போராட்ட வரலாறு.எந்தவொரு முக்காடுகளும் இன்றி இயல்பாகவே விடுதலை என்ற ஒப்பற்ற வாழ்வியலை தனது மக்களுக்கு பெற்று கொடுக்க போராடிய அவரின் வாழ்வு முழுவதுமே ,வீரமும்,அர்பணிப்பும்,தியாகமும்,ஒழுக்கமும் ஓர்மமும் தோழமையும் ,அற்புதங்களும் நிறைந்தே காணப்படுகின்றன.

இனி எப்போதும் அந்த வரலாறுதான் ஈழ தமிழினத்துக்கு நேரேடுக்கும் அந்த வரலாற்றை படிப்போம் திரும்ப திரும்ப படிப்போம் ,அதிலிருந்து கற்ப்போம் ,அதையே கற்ப்போம் ,மற்றவர்களுக்கும் சொல்லுவோம் ,


தொடங்குகிறோம்.___இது நடந்தது (1983  ) ஆரம்பத்திலையே ( 1982 ) இறுதியில் விடுதலைபுலிகளின் போராட்டம் சிறிலங்கா இனவெறி அரசால் நிராகரிக்க முடியாத அளவிற்கு வேகம் கொண்டிருந்தது.நெல்லியடி சந்தியில் சிறிலங்கா காவல் துறையினரின் வாகனத்தின் மீது அதிரேடி தாக்குதல் .மக்கள் செறிந்த ஒரு முன்னிரவு பொழுதில் நடத்தபட்டாதால் அதிர்ச்சி கொண்டிருந்த சிங்களத்திற்கு அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பொன்னாலை பாலத்தில் கடற்படை மீதான கண்ணிவெடித் தாக்குதல்.சாவகச்சேரி காவல் நிலையம் மீதான வீரமிகு வெற்றிகரமான தாக்குதல்.உமையாள் புரத்தில் இராணுவ தொடரணி மீதான தாக்குதல் என்பவற்றால் செய்வது அறியாது பேரின அரசு நின்றது.தமிழீழத்தின் வடபகுதியில் சிறிலங்கா அரசின் ஆதிக்கபிடி கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருவதை ஆட்ச்சியாளர்கள் அதிர்ச்சியுடன் விளங்கி கொண்டனர்,தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை நிர்வாகம் தோல்விகண்டு வருவதை தெரிந்து கொண்டனர்,தமிழர் நிலத்தின் மீதான நிர்வாகத்தை பலமாக இருக்குவதன் முலமே தமிழ் தேசிய இனத்தை நீண்டகாலத்துக்கு அடிமைகளாய் வைத்திருக்கலாம்.

அதற்க்கு ஏதாவது செய்தே தீர வேண்டிய தேவை சிங்களத்துக்கு( 1982  )  ன்  இறுதியிலும்(1983  ) ன் தொடக்கத்திலும் ஏற்பட்டது.(1983    ) ன் தொடக்கத்தில் உலகத்திக்கும் தென்னிலங்கைக்கும் தமிழ் பகுதிகளில் இன்னமும் சிங்கள நிர்வாகமே தொடர்வதாக கட்டவேண்டிய காரணத்துக்காக முதலாம் கட்டாமாக யாழ் மாவட்டத்தில் உள்ள மாநகரசபை ,நகரசபைகளுக்கான தேர்தலை அறிவித்து,யாழ் மாவட்டத்தில் ,சாவகச்சேரி ,பருத்தித்துறை ,வல்வெட்டித்துறை என்பன மட்டுமே நகரசபைகள் ,யாழ்ப்பான நகரம் மாநகரசபை ஆகும்,ஆக இந்த நான்கு இடங்களிலும் இருந்த நகர, மாநகர சபைகளுக்கான தேர்தலை அறிவித்து அதற்க்கு முந்திய பத்து மாதங்களாக விடுதலை புலிகள் காவல்துறையினர் மீதும்,கடற்படை மீதும் நடத்திய தாக்குதல்களால் பெரும் அச்சம் கொண்டிருந்த சிங்கள அரசு இயந்திரத்துக்கு சிறிலங்காவின் தேர்தல் அறிவிப்பு ஒரு ஊக்க  மறுத்ததாக கொடுக்கபட்டது.

மறுபுறத்தில்  தமிழீழ மக்கள் மீது ஒரு சவாலாகவும் சிங்களம் இதை செய்தது,அரசியல் ரீதியான இந்த சவாலை மட்டுமல்ல இராணுவ ரீதியாகவும் விடுதலைப் புலிகளுக்கு சவால் விடும் வகையில் குருநகர் இராணுவ முகாமில் லெப்,கேணல் சரத் முனசிங்க தலைமையில் ஒரு பாரிய நுணுக்கமான புலனாய்வு மைய்யத்தை சிங்கள ஆட்சியாளர்கள் நிறுவினார்கள்.( 1983  ) மே ( 18 ) ஆம் திகதி   நடக்கவிருந்த   நகர மாநகர சபைகளுக்கான  தேர்தலை ஒழுங்காக நடத்தும் பொறுப்பு இந்த புலனாய்வு மைய்யத்திடம் மறைமுகமாக ஒப்படைக்க பட்டது.இந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவமான ஒரு முடிவை தேசியத் தலைவர் எடுத்தார்.சிங்கள அரசு தேர்தலை அறிவித்து ஓரிரண்டு நாட்களுக்குள் தலைவர் அந்த முடிவை இயக்கத்தின் எல்லா  உறுப்பினர்களுக்கும் அறிவித்தார்.அந்த நேரத்தில்  விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்த உறுப்பினர்களின் மொத்த தொகையே முப்பதிற்கும் குறைவானதே.மிகக் குறைவான உறுப்பினர்களை வைத்துக்கொண்டும் மிக வலுக்குறைந்த ஆயுதங்களுடன் மக்கள் மத்தியில்  பகிரங்கமான தொடர்பு சாதனங்களான பத்திரிக்கை போன்ற எதுவும் அற்ற நிலையிலும் ஒரு பலமான அரசாங்கத்தின் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்த தலைவரின் தீர்க்கமும் துணிவும் இன்றுவரை வியப்புக்குரியதாகவே இருக்கிறது.தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்த  மூத்தவர்கள்,தேர்தலை புறக்கணிக்கும் ,முடிவை சாத்தியமற்ற ஒன்று என்றே நினைத்தார்கள்.தலைவருக்கும் சொனார்கள் மிகவும் சொற்பமான மக்களே விடுதலை புலிகளை அறிந்தும் தெரிந்தும் வைத்திருந்த அன்றைய நிலையில் என்னவிதத்தில் மக்களை அணுக முடியும் என்று முத்த உறுப்பினர்கள் ஒரு சிலர் சொனார்கள்.

இந்த நீரத்தில் தலைவரின் முடிவை எடுக்கும் ஆற்றல் பற்றி கொஞ்சம் சொல்லாம்.தலைவர் எப்போதும் திடீர் என்று முடிவுகளை எடுக்க மாட்டார் அவர் தமிழீழ மக்களின் விடுதலைக்காக சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செயற்பட்டதால் அவரால் தினமும் சிங்களத்திலும் தமிழீழத்திலும் ஏற்படும் மாற்றங்கள் உணர்வு ரீதியாக உள்வாங்கபட்டு வந்தன.அந்த உள்ளுணர்வு என்பது அசாத்தியமானது,அற்புதமானது,அவருடைய செயல் சிந்தனை எல்லாமே விடுதலை நோக்கியே இருந்ததால் அவரால் முடிவுகளை இயல்பான முறையிலையே எடுக்க முடிந்தது.முடிவு எடுத்த நிமிடத்தில் இருந்து அதனை செயற்படுத்த அவர் வேலை செய்ய தொடங்கிவிடுவார்.(1983   ) மே (18  ) நடைபெற இருந்த தேர்தல் சம்மந்தமான தன்னுடைய முடிவை அழுத்தம் திருத்தமான எல்லா உறுப்பினார்களுக்கும்  சொனார் .இத்தேர்தலை ,மக்கள் புறக்கணிக்க வேண்டும், அதற்காக இன்றிலிருந்து விடுதலைபுலி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முழுதாக வேலை செய்ய வேண்டும்.நாங்கள் எமது மக்களிடம் போவோம்.தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று சொல்லுவோம்,என்று சொன்னாலும் இன்னும் குறைவான நாட்களில் இதனை எப்படி செயற்படுத்துவது.என்பது பல உறுப்பினர்களுக்கு சந்தேகம் இருந்தது என்னவோ உண்மைதான்,

ஆனாலும் தலைவரின் திட்டமிடல் என்பது மிக வீச்சானது என்பதை அடுத்த நாட்களில் எல்லோரும்  புரிந்து கொண்டனர்.மே ( 18 ) தேர்தலுக்காக சில வாரங்களே இருந்தபோது.தலைவர் முதன் முறையாக ஒரு அறிக்கை விடுகிறார்.அந்த நேரத்தில் தலைவரின் அறிக்கையை வெளியிட எந்த ஊடகமும் விடுதலை புலிகளிடம் இருந்திக்கவில்லை.அந்த காலப்பகுதியில் தலைவரின் அறிக்கையோ அல்லது தாக்குதல் உரிமைகோரும் அறிவிப்போ எது ஆனாலும் அப்போது இருந்த உறுப்பினர்களே தெருத் தெருவாக மக்கள் மத்தியில் விநயோகிப்பார்.அது ஒன்றுதான் மக்களுக்கும் எமக்குமான ஊடகம் அப்போது.சிறிலங்கா அரசியந்திரத்துக்கான இந்த தேர்தலை நிராகரிப்போம் என்ற தலைப்புடன் தலைவரின் பெயரில் வெளியான அறிக்கை வெளியிடபட்ட அந்த நாளில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கு திகைப்படைந்தது.அதிர்ச்சி கொண்டது ,சிங்கள அரசியல் சக்த்திகளை பொறுத்தவரை ஒரு சிறிய  கொரிலா அமைப்பு இதனை எப்படி சாத்தியமாக்க போகிறது என்று எண்ணியது.அனால்   தமிழ் அரசியல் புள்ளிகளோ என்ன இது புதுமுறை என்று கேள்விகளுக்கும் திகைப்புக்குள்ளும் முடங்கி நின்றது .தேசியத் தலைவரோ அடுத்த கட்டத்துக்காக திட்டத்தில் இருந்தார்.

மிகக் கடினமான காலம் அது ஒரு கொரிலா இயக்கமாக அறியபட்டிருந்த அமைப்பின் "சிங்கள தேர்தலை புறக்கணிக்கும்"அறிவிப்பை தொடர்ந்து சிங்கள ஆயுத படைகளும் அதனுடைய  முதுகெலும்பான புலனாய்வும் விழித்து கொண்டது.தேர்தல் நடைபெறவேண்டிய யாழ்பாணம் வல்வெட்டித்துறை ,பருத்தித்துறை சாவகச்சேரி பகுதிகளில் ,சிறிலங்கா புலனாய்வு வலையை செறிவாகவும் ஆழமாகவும் விதித்தது.அதற்குள் தினமும் நடமாடுவது மரணத்திற்கும் வாழ்வுக்குமான புள்ளியில் ஆடியது.அப்படியிருந்தும் தலைவரும் உறுப்பினர்களும் தினமும்  முப்பதிலிருந்து ஐம்பது கிலோமீற்றர்  துரம் மக்கள் மத்தியில் அலைந்து திரிந்து வேலை செய்தனர்.எவளவோ சுற்றிவளைப்புக்கள் .கெடுபிடிகளுக்குள் மத்தியிலும் தலைவர் அடுத்த கட்ட திட்டங்களாக வேலையை நகர்த்தினார்.

முதலில் தலைவரின் பெயரால் தேர்தலை புறக்கணிக்கும் படி அறிவிப்பை தொடர்ந்து,தேர்தலில் போட்டியிடும் தமிழ் கட்சிகளுடன் சந்தித்து.விடுதலை புலிகளின் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவாக போட்டியிலிருந்து விலகும் படி கேட்க்கும் படி அடுத்த நகர்வை செய்தார்.தலைவரின் திட்டத்துக்கு அமைய இயக்க உறுப்பினர்கள் முதலில் தமிழ் கொங்கிரஸ்,தமிழர்விடுதலை 
கூ ட்டனி  வேட்பாளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தலை புறக்கணிப்பு சம்பந்தமான மணிக்கணக்கான விளக்கங்களை சொன்னார்கள்.இது வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய முடிவு ,அன்றைய தமிழ் கொங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்தால் எடுக்கபட்டது.இயக்க உறுப்பினர்கள் விளக்கம் சொன்ன மறுநாளே தமிழ் கொங்கிரஸ் தனது அனைத்து வேட்பாளர்களையும் போட்டியிலிருந்து விலகும்படி செய்தது.

அனால் குடுதலான தமிழர் விடுதலை 
கூட்டனி வேட்பாளர்கள் பலமான விளக்கங்களுடனான அலசலுக்கு பிறகே போட்டியிலிருந்து விலகினார்கள்.முதலில்  மக்களுக்கான அறிவிப்பு.பிறகு தமிழ் கட்ச்சி வேட்பாளர்களை போட்டியிலிருந்து விலக செய்தல் என இரண்டு திட்டங்கள் முடிந்த நிலையிலும் தேர்தல் களத்தில் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுடனான அணுகுமுறையை எதிரிகளுடனான அணுகுமுறையாகவே கையாள வேண்டும் என்று தலைவர் முடிவெடுத்தார்.அதன்படி ஆயுத ரீதியாக எமது மக்களை அடிமைகொண்ட  சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களுடன் அதே ஆயுத ரீதியாக அணுக முடிவு எடுக்கபட்டது.தேர்தல் நடைபெற இருந்த நான்கு இடங்களிலும் போட்டியிட்ட சிங்கள கட்சிகளின் முதல் வேட்பாளர்கள் மீதான தாக்குதலுடன் சிங்கள கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை பெரிதும் நிறுத்தி கொண்டார்கள்.முக்கியமானது என்னவென்றால் தலைவர் திட்டமிட்டதுடம் மட்டும் நிற்காமல் தானும் துண்டு பிரசுரம் கொடுப்பது வேட்ப்பாளர்களுடன்  கதைப்பது ,சிங்கள கட்சி வேட்பாளர்களை ஆயுதம் முலம் இல்லாமல் செய்வது .என எல்லாவற்றிலும் தலைவரும் நேரடியாக தானும் பங்குகொண்டது எல்லா உறுப்பினர்களுக்கும் ஊக்கத்தை கொடுத்தது.

இவளவும் நடந்தே சிங்களம் இந்த தேர்தலை நடத்தி முடிப்பதே என்றே கங்கணம் கட்டி நின்றது.திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தனது வானொலி முலம் ஒருநாளைக்கு நிறைய முறை திரும்ப திரும்ப சொன்னது.தலைவர் தனது அடுத்த கட்டத்தை முடிவெடுத்தார்.அனைத்து உறுப்பினர்களையும்  நான்கு பிரிவுகளாக்கி தேர்தல் நடைபெறும் நான்கு இடத்துக்கும் அனுப்பி வைத்தார்.இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒன்றும் பெற்று தராது என்றும் .இது சிறிலங்கா இனவாத அரசின் அடக்குமுறையை சட்ட ரீதியனதாக்கும் ஒருவித சிங்கள பேரினசக்த்தி  என்றும்  மக்களுக்கு தினமும் விளக்கும் படி கூறினார்.அந்த நாளும் வந்தது (1983   ) மே ( 18  ) முப்படைகளையும் அனைத்துவிதமான வளங்களையும் கொண்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழீழ மக்களையே தமது பலமாக நம்பிய ஒரு சிறிய இனத்துக்குமான பலப்போட்டியகவே அன்று விடிந்தது.

அரசாங்கம் வாக்கு சாவடிகளை திறக்கும்  முன்னரே சிறிய பைப்குண்டுகள் வெடித்தன மிகப்பெரிய அனர்த்தத்துக்கான முகவுரையாகவே இந்த சிறிய குண்டுகள் அதிகாலையில் வெடித்தன .அன்று மதியம் வரை எல்லா வக்குசாவடிகளும் வெறுமையாகவே ஈ ஒட்டிக்கொண்டு இருந்தன.எல்லா வாக்குசாவடிகளுக்கும் சிங்கள இராணுவம் காவலுக்கு நின்றன.கொழும்பிலிருந்து கொண்டு தமிழீழ மக்களை ஆளும் கனவில் மிதந்து கொண்டிருந்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எமது மக்கள் தமது ஒன்றுதிரண்ட தேர்தல் புறக்கணிப்பின் முலம் தமது எதிர்ப்புக்களை தெருவிததனர்.நேரம் செல்ல செல்ல மக்கள் வாக்களிக்க வாராததை கண்ட படையினர் பலவந்தமாக வாக்களிக்க சில சாவடிகளில் அழைத்தனர்.இந்த நேரத்தில் தலைவர் தனது அடுத்த திட்டத்தை இறக்கினார் .ஆயுதப்படைகளின் காவலுடன் தமிழர்
நிலங்களில்   நடைபெறும் தேர்தல்  சதிக்கு அதன் உயிர்நிலையிலையே அடிகொடுத்தார்.யாழ் கந்தர் மேடம் தேர்தல் நிலையத்தில் காவல் நின்ற இராணுவத்தினர் மீது சீலன் தலைமையில் அதிரடித்தாக்குதல் நடத்தபட்டு கோப்ரல் ஜெயவர்த்தன என்ற அதிகாரி கொல்லபட்டு அவரிடம் இருந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்ற படுகிறது .

இப்படியாக மாலையுடன் வாக்களிப்பு முடிகிறது இரவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டபோது பருத்தித்துறையில் ( 98 ) வீதமானவர்களும்  வல்வெட்டி துறையில் (96  ) வீதமான மக்களும் சாவகச்சேரியில் (92   ) வீதமான மக்களும் .யாழ்ப்பாணத்தில் ( 94  ) வீதமான மக்களும் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து இருந்தார்கள்,ஒரு அரசியல் ரீதியான நகர்வை மிக சொற்ப உறுப்பினர்களை வைத்துகொண்டு வெற்றிகரமாக நடத்திய தேசியத் தலைவரின் அயராத உழைப்பு எதற்கும் கலங்காத பயணம் என்பன இன்னும் பலநுறு வருடங்களுக்கும் சொல்லபட்டு கொண்டே இருக்கவேண்டும்.இந்த தேர்தல் புறக்கணிப்பு என்பது மக்கள் வாக்களிக்காமல் விட்டதுக்கு என்பதற்கு அப்பால் அதன் முடிவுகள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் அதன் அடுத்த கட்ட போராட்டத்திற்கும் செய்திகளையும் ,படிப்புக்களையும்,வளங்களையும் சேர்த்து தந்தது.தேர்தலில் சராசரியான ( 94  ) மக்கள் வாக்களிக்காதது எமக்கு பெரிய வெற்றி என்றும் எமது மக்களும்  உறுப்பினர்களும் குதுகலித்து கொண்டிருந்த வேளையில் தலைவர் தனது அடுத்த நகர்வுக்கான திட்டத்தை சீலனுக்கு சொல்லிக்கொண்டு இருந்தார்.அவர் எப்போதுமே இப்படித்தான் வெற்றியில் குதுகலித்தோ தோல்வியில் குந்தியிருன்ததோ ஒருபோதும் இல்லை .அவருடைய ஒரே நோக்கம் விடுதலை,விடுதலை ,விடுதலையே .அதை நோக்கியே அவர் நகர்ந்து கொண்டிருந்தார்.இப்போதும் நகர்ந்து கொண்டிருப்பார் ,அவரின் வரலாறே விடுதலையை நோக்கி எம்மை நகரத்து கையிருப்பாக எம்மிடம் உள்ளது.

(நன்றி ச,ச ,முத்து )

_______________________________________________________________________________________

கூடங்குளம்: "கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு"

அன்புடையீர்,

கூடங்குளம் அணுமின்நிலைய  எதிர்ப்புப் போராட்டம் தொடபாக  தீராநதி அக்டோபர் இதழில்  வெளியான எனது கட்டுரை செழுமைப் படுத்தப் பட்டு தங்கள் வாசிப்புக்கு அனுப்பப் படுகிறது.

பா.செயப்பிரகாசம்.

https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=1MhWp7wbhPdYeIjoFdNExO-ruWcp2M0Dw_LXIGp7gJkLGCeywEN3CQuvU3dNA&hl=en_GB


 மேலுள்ள இணைப்பை அமத்தி ( கிளிக் ) பண்ணி பார்க்கவும்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை