வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, October 29, 2011

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-33

ஒரு போராட்டத்தில் தகவல் தொழினுட்பம் என்பது மிகவும் முக்கியமானது .அது இல்லாவிட்டால் எந்தவொரு தாக்குதல் திட்டத்தையும் திட்டமிட்டது போன்று திறமையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்ள முடியாது.அதே தொடர்பாடல் பல பாதகாமான அம்சங்களையும் கொண்டிருக்கும்.அதாவது எதிர் தரப்பில் உரையாடுவதை கேட்டறிந்து கொள்ளுவதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நவீன காலத்தில் ஒட்டு கேடு தாக்குதலை முறியடிக்கும் நிலையம் இருக்கிறது,இதனால் ஒட்டு கேட்பதை தடுப்பதிலும் பார்க்க ,ஒட்டு கேட்பதை எதிரி புரிந்துகொள்ளாமல் இருப்பதிலையே கவனம் அதிகமாக செலுத்த படுகிறது.இதனாலே களமுனைகளில் எப்போதும் பரிபாபசைகளே பயன்படுத்த படுகின்றன,விடுதலை புலிகளின் உரையாடல்களை சிறிலங்கா படையினரும்
..படையினரின் உரையாடலை விடுதலை புலிகளும் மாறி மாரி ஒட்டு கேட்டுகொண்டே இருப்பார்கள்,இதுவும் போர் நடைபெறும் பகுதிகளில் என்றால் அவர்களின் உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்படும்,ஏனெனின் அந்த ஒட்டுகேட்பு கூட களத்தில் வெற்றி தோல்வியை தீர்மானித்துவிடும்,.அல்லது மாற்றியமைத்துவிடும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன,எனவே சிறிலங்கா படையினர் தாக்குதலை தொடுத்துவிட்டால் .விடுதலை புலிகளின் மொநிர்ரரிங் பகுதி வேகமாக செயல்பட ஆரம்பித்துவிடும்.

சிறிலங்கா படையினர் தாக்குதலை தொடுப்பதற்கு முன்பாக அவர்களின் பல்குழல் ஆட்லெறி அணிகள் அந்த பகுதியை சல்லடை போடா தொடங்கிவிடும்.இது களமுனையில் இருந்து (20-25 ) கிலோமீற்றருக்கு பின்னல் இருந்து நடக்கும் நிகழ்வு,தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போது எங்கிருந்து தாக்குதல் நடைபெறுகிறது என்பதை விழுகின்ற எறிகணைகள் வரும் திசைகள் மட்டுமல்ல அவர்களின் உரையாடல்களின் பரிபா பாசைகளில் இருந்தும் புரிந்துவிடும்.இதனால் தாக்குதல் நடத்தியவுடன் தங்கள் பல்குழல் எறிகணை செலுத்திகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு இராணுவத்தினர் நகர்த்தி விடுவார்கள்,இதனால் படையினரின் இலக்கு எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாலும்.தாக்குதலின் பின்னர் அந்த பகுதியை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினால் படையினருக்கோ அல்லது அவர்களின் தளபாடங்களுக்கோ இழப்புக்கள் ஏற்படாது,அவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கோ அல்லது பாதுகாப்பான பின் தளத்திற்கோ சென்றுவிடுவார்கள்,இதே வேலை தாக்குதலின் போது காயமடையும் படையினருக்கான மருத்துவ பகுதி தயார் படுத்தலும் அதாவது காயம் அடைந்த படையினரை பின்தள கள மருத்துவம் எடுப்பது மேலதிக சிகிச்சை என்றால் விமானம் மூலமோ ,தரை வழியாகவோ இடமாற்றம் செய்வதற்கான தயார் படுத்தலின் போதான தொலைத்தொடர்பு உரையாடல்கள் ,உணவு வினியோகம் தயார் படுத்தல் ,குறிப்பாக தாக்குதலை தொடர்வதாயின் சிறிலங்கா படையினரை பொறுத்தமட்டில் களமுனை வீரர்களுக்கு சமைத்த உணவினையே முதன்மையாக கொண்டு வினயோகம் செய்வார்கள்,இது படையினரை உற்சாகபடுத்தும் ஒரு நடவடிக்கையாக செய்ய[படும் ,உணவு தயாரிப்பதற்கு பின்தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் அவர்கள் மேலும் சண்டையிடுவார்கள்,

சண்டை முடிந்த பின்னரும் அவர்களுக்கு பக்கெட் டின் உணவுகளே வினயோகம் செய்யப்படும்,இதற்க்கான ஏற்பாடுகள் நடைபெறும்.இவ்வாறு படையினரின் உணவு முறைக்கான முன் ஏற்பட்டு நடவடிக்கைகள் தொடர்பான உரையாடல்கள் கூட சண்டையின் அடுத்த கட்டத்தை விடுதலை புலிகள் அறிந்து கொள்ளுவதற்கு எதுவாக இருந்தது.மற்றும் வான் தாக்குதலுக்கு வான் படையினரின் தொடர்பாடல் உடாகவே தயார் படுத்துவார்கள் ,இவ்வாறு பல்வேறுபட்ட தயார்படுத்தல்களை தொலைத்தொடர்பு உரையாடல்களில் பெரும்பாலும் மேற்கொண்டதன் பின்னர்தான் சிறிலங்கா படையினர் படைநகர்வினை மேற்கொள்ளுவார்கள்,அத்துடன் படை அதிகாரிகள் கிழ்மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வேலைத்திட்டங்களை ,கட்டளைகளை ,தயார்படுத்தல்களை ,வழங்குவார்கள்,சிங்கள மொழி பரிபாசையில்தான் படையினர் இந்த உரையாடல்களை மேற்கொள்ளுவார்கள்.எனினும் விடுதலை புலிகளின் மொநிர்ரிங் பகுதி ஒட்டு கேட்டு தகவல்களை உள்வாங்கி வேவு போராளிகளின் தகவல்களையும் வைத்துதான் (பகுப்பாய்வு நடவடிக்கை உறுதிப்படுத்தல் நடவடிக்கை முலம் )எதிரியுன் நகர்வுக்கான பிரதேசங்களை இனம்கண்டு அந்த பகுதி போராளிகளை விழிப்படைய வைத்திருந்து ,எதிரியின் தாக்குதல்களை முறியடித்தார்கள் ,இந்த ஒட்டு கேட்பினால் போராளிகள் தயார்நிலையில் இருந்ததால்தான் ,பல களமுனைகளில் எதிரியின் திட்டம் தவிடுபொடியாகி பலத்த இழப்புக்களை சந்தித்தான்,

இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக முகமாலை களமுனை பற்றி இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன் ,முகமாலை கட்டளை தளபதியாக கேணல் தீபன் அவர்கள் இருந்தபோது ,இவருடன் தான் இவரது மொநிர்ரரின் பிரிவு இருக்கும் ,அல்லது களமுனையில் எதிரியின் கட்டுபாட்டுக்குள் நிற்கும் வேவு போராளிகளின் தகவல்களை உடனுக்குடன் இவருக்கு வழங்கிக்கொண்டு இருப்பார்கள்,இவற்றை தொகுத்துத்தான் சிறிலங்கா படையின் படைநகர்வு தொடர்பாக தீபன் அவர்கள் தமது அடுத்த பதிலடி குறித்து தீர்மானிப்பார்,இது அவருக்கு பல வெற்றி தாக்குதல்களை நடத்துவதர்ற்கு உதவியது,அத்துடன் இந்த தரவுகளை கொண்டு எதிரி எப்போது தாக்குதல் நடத்துவான் ,அதாவது குறிப்பிட்ட நாட்களுக்குள் (இரண்டு அல்லது முன்று நாள் )எதிரி எம்மீது தாக்குதலை தொடுப்பதற்கு தயாராக இருக்கிறான் என்று காலக்கெடு கொடுக்கும் அளவிற்கு எதிரியின் தொடர்பாடல்களின் இருந்து அவர் தகவல்களை அறிந்து கொண்டிருந்தார் ,இதன் பின்பு போராளிகளை விழிப்பாக வைக்குமாறு பகுதி பொறுப்பாளருக்கு கட்டளை தளபதியால் தகவல் பிறப்பிக்க படும்,அதே நேரம் மோட்டார் ஒருங்கிணைப்பு பகுதிக்கும் வெடிபொருள் பகுதிக்கும் உசார் படுத்தல் செய்தி பரிபபாசையில் அனுப்பிவைக்கப்படும்,இதன் பின்பு போராளிகள் மத்தியில் கதைப்பார்கள் என்னடா முன்று நாளைக்கு ரோட் அலேட்டாம் எந்த பக்கத்தால் வெளிக்கிட போறான் ,என்ற பக்கத்தில் இருந்துதான் ஆமியின் சடலங்களை அதிகமாக எடுக்கவேண்டி வரும் ,என்ற எண்ணத்துடன் விழிப்புடன் செயல்பட்டு கொண்டிருப்பதுடன் ,தமக்கு தேவையான வெடிபொருட்கள் ரவைகள் என்பனவற்றை சேகரித்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்,இவ்வாறுதான் முகமாலை களமுனையிலும் சரி ,ஏனைய களமுனைகளிலும் சரி ,எதிரியின் வழிந்த தாக்குதலை முறியடித்த பல வெற்றி தாக்குதலுக்கு மொநிர்ரரின் என்பது உறுதுணையாக இருந்தது,

என் மறுபக்கம் கூறுவதானால் விடுதலை புலிகளின் தொலைத் தொடர்ப்பு உடான சில தகவல் கசிவுகள் கூட சிறிலங்கா படையினர் ஒட்டு கேட்டல் உடாக விடுதலை புலிகளின் நடவடிக்கைகள் சில முடக்கபட்ட நிகழ்வுகளும் நடந்தேறி உள்ளன.இவ்வாறுதான் மன்னார் களமுனைகளில் விடுதலைபுலிகளின் தொலைத்தொடர்பு கருவிகளில் சிறிலங்கா படையினரின் கொச்சை தமிழிலான குரல்கள் ஒலிக்கின்றன ,அதாவது வோக்கியில்,( )இலக்கத்தில் தளபதி ஒருவர் கட்டளை கொடுத்துக்கொண்டு இருந்தார் ,இந்த கட்டளைகளை கேட்காத வண்ணம் கொச்சை தமிழால் எதோ எதோ வார்த்தைகளை கூறி.கட்டளையை குழப்பிக்கொண்டு இருந்தனர் ,அவ்வாறு குழப்பினால் அடுத்த கட்டளை நம்பர் தயாராக வைத்திருப்பார்கள்.உடனடியாக போராளிகள் அடுத்த கட்டளை இலக்கத்தை மாற்றிவிடுவார்கள்,தளபதியும் அவ்வாறே செய்து கட்டளையினை புதிய அலைவரிசையில் பிறப்பிப்பார்.இவ்வாறுதான் அன்றும் நான் முன்னர் கூறியது போன்று தளபதி விதுச சொர்ணம் ஆகியோர்களின் குரல்கள் மன்னார் களமுனைகளில் வோக்கியில் ஒலித்துக்கொண்டு இருக்கும்போது ,அதனை ஒட்டு கேட்டுகொண்டிருந்த படையினர் ,மாவிலாற்று பிரச்சனையை எடுத்து கூறி தளபதி சொர்ணம் அவர்களை குடாத வார்த்தைகளால் திட்டி கொண்டிருந்தான் ,அப்போது அங்கு தளபதி பானு அவர்கள் நின்றிருந்தார் ,எங்கிருந்து படையினர் இதனை ஓட்டுகேட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் ,என்பதை அவர் அறிந்திருந்தார் ,அடுத்த நொடி (தொடரும் )

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை