வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, November 23, 2011

கொசோவோ தமிழீழம் தொடர்பில் ...


 --மேற்குலகத்தின் நகர்வுகளில் உள்ள ஒற்றுமைகள் --

அனைத்துலக ரீதியில் சிறிலங்கா தொடர்பான செய்திகள் அண்மைய காலங்களாக தலைப்பு செய்திகளாக மாற்றம் பெற்றுவருகின்றன.  சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்களும் ,அது தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள போக்கும் தான் அதற்க்கான பிரதான காரணம்.சிறிலங்கா அரசு மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் என்பது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகவே கொண்டது.இந்த இரு காரணிகளையும் முன்னிறுத்தியே மேற்குலகமும் சரி ஐநாவும் சரி சிறிலங்கா விடையத்தில் தலையை நுழைக்க போகின்றன.மேற்குலகத்தை பொறுத்தவரையில் சிறிலங்கா விடையத்தில் உள்நுளையவேண்டிய
கட்டாயம் ஒன்று உள்ளது .அதற்க்கு காரணம் பூகோள ரீதியாக இந்து சமுத்திர பிராந்தியம் பெற்றுவரும் முக்கியத்துவம்தான்.எனவேதான் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து இந்திய மவுனமாகவே உள்ளது.

சிறிலங்கா அரசு மனிதஉரிமை மீறல்களை மேற்கொண்டு உள்ளது என்பதை ஏற்றுகொள்ளும் நிலையில் குட இந்திய இல்லை.என்பதுதான் கசப்பான உண்மை.இருந்தபோதும் மேற்குலகம் சிறிலங்கா மீது மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் மீதான அழுத்தங்களின் மூலம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றது என்ற கேள்விகள் எழலாம்.இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மேற்குலகம் மேற்கொண்டுவரும் நகர்வுகளுக்கும் கொசோவோ பிரச்சனையில் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கும் இடையிலான ஒற்றுமை அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

( 1990  ) களில் உக்கிரம் பெற்ற பல்கன் வளைகுடா பிரச்சனையில் யுகோஸ்லாவக்கியாவில் இருந்து துண்டு துண்டாகி உடைந்த நாடுகளில் (2008   ) ஆண்டு கொசோவோவும் இணைந்து கொண்டது.அப்போது கொசோவோவின்  சுகந்திர பிரகடனம் அனைத்துலகத்தின் பாதுகாப்புக்கும்,சமாதானத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் என சிறிலங்கா தெரிவித்து இருந்தது.ஐநாவின் பாதுகாப்பு பேரவையின் (1.244     ) சரத்தின் அடிப்படையில் கொசோவோ ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாக சபையின் கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகிக்க பட்டு வருவதுடன்,நோட்டோ படையினரின் தலைமையிலான கொசோவோ படையினர் பாதுகாப்புக்களை வழங்கி வருகின்றனர்.இதன் மூலம் பிராந்தியத்தில் சட்டரீதியாக சேர்பியாவின் இறைமை ஈண்டும் நிலைநாட்ட பத்தாக அவர்கள் கூறுகின்றனர்.

கொசோவோ மீதான மேற்குலகத்தின் தலையீட்டுக்கு பூகோள அரசியல் நலம் சார்ந்த கொள்கைகளே காரணமாக இருந்த போதும்,சேர்பிய அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள்தான் மேற்குலகத்தின் தலையீடுகளை இலகுவாக்கியது.முதலாவதாக யுகோஸ்லாவக்கியவால் கொசோவோவுக்கு வழங்கபட்ட சுயநிர்ணைய உரிமையை சேர்பிய தொடர்ந்து பேணவில்லை.(1974   ) ஆம் ஆண்டு வழங்கபட்ட இந்த சுயநிர்ணைய உரிமையின் அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் கல்வி,சுகாதாரம்,வீடமைப்பு,காவல்துறை நீதிமன்றம்  போன்ற அதிகாரங்கள் கொசோவோ அரசுக்கு வழங்கபட்டு இருந்தது.அனால் அதனை மதிக்காத சேர்பிய (மிலோசொவிக் அரசு கொசோவோவை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர படை நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தது..தனது படை நடவடிக்கைக்கு காரணமாக சேர்பியாவின் இறைமை தொடர்பாக மிலோசொவிக் பேசினார்.

கொசோவோவின் சுயநிர்ணைய உரிமை ரத்து செய்யபட்டது முதலாவது காரணமாக இருந்த போதும்,அதனை கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கையின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் இடண்டாவது காரணமாக அமைந்தன.இந்த இரு காரணங்களுமே மேற்குலகம் அங்கு கால் பதிக்க வழி வகுத்தன.கொசோவோ விடுதலை இராணுவத்துக்கு எதிரான சேர்பிய அரசின் போர்பிரகடனம் குறிப்பிட்ட இனத்துக்கு எதிரான போர்பிரகடனமாக காலப்போக்கில் மாற்றமடைந்தது.முன்னர் சேர்பிய வலுவாக இருந்தபோதும் அமெரிக்க உட்பட பல நாடுகள் கொசோவோவின் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை,கொசோவோ விடுதலை இராணுவத்தை அமெரிக்க தடை செய்திருந்தது.பாரிய படை வளமும்,பொருளாதார வளமும் கொண்ட நாடுகளின் பிரச்சனைகளில் தலையிடுவதற்கு அனைத்துலக சமுகம் துணிவதில்லை .உதாரணமாக செச்சென்னியா  பிரச்சனை ,மற்றும் சீன எதிர்கொண்டுள்ள திபத் பிரச்சனை என்பவற்றை இங்கு குறிப்பிடலாம்.

அனால் படைத்துறை ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும் வலுவிழந்து காணப்படும் ஒரு நாடு அனைத்துலக கவனத்தை தன பக்கம் திருப்ப முடியாது.மேலும் அனைத்துலகத்தின் நன்மதிப்பு இருந்தால் மட்டுமே நாடு பிளவுபடுவதை தடுக்க முடியும்.இந்த இரண்டையும் சேர்பிய இழந்த போது மேற்குலகம் இலகுவாக நுழைந்து கொண்டது.(இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் சிறிலங்கா பொருளாதார அரசியல் ரீதியாக பலவீனமாகி வருகிறது அல்லது மேற்குலகத்தினால் பலவீனமாக்க படுகின்றது)கொசோவோவில் மேற்கொள்ளபட்ட  மிக மோசமான மனித உரிமை அவலங்கள் காரணமாக மேற்குலக நாடுகள் தலையீடு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன்,இறுதியில் சேர்பிய இராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு முடக்க நிலைக்கு கொண்டுவர பட்டன.

சேர்பியாவின் இறைமை உள்ளிட்ட அனைத்துலக சட்டங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு கொசோவோவின் சுகந்திர பிரகடனத்துக்கு அனைத்துலக நாடுகள் அங்கீகாரம் வழங்கின.பிராந்தியத்தில் உறுதித்தன்மை ஏற்படுத்த வேண்டுமென்ற யதார்த்த நிலையின் அடிப்படையில்தான் இந்த நாடுகள் அங்கீகாரம் வழங்கின.தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை பொறுத்தவரையில் அதன் ஆயுத போராட்டம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மவுனித்து போனாலும்,சிறிலங்கா அரசின் படை நடவடிக்கையை மிகப்பெரும் மனித உரிமை மீறலாகவும், போர் குற்றங்கலாகவும்,மற்ற பட்ட பின்னரே ஆயுத போராட்டம் மவுனித்து போனது.

மேலும் தமிழர் தாயகத்தின் இறைமையை மறுசீரமைப்பு செய்யுமாறு ஐநாவிடமும் ,அனைத்துலக சமூகத்திடமும்,விடுதலை புலிகள் முன்னர் கேட்டிருந்ததும் இங்கு கவனிக்க தக்கது.அதாவது தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்குமாறு அவர்கள் கேட்டிருந்தனர் .அனால் அதற்க்கான காலம் தற்போது கணிந்துள்ளதாகவே அனைத்துலகத்தின் நகர்வுகளை நோக்கும் போது புலப்படுகிறது.இதனை மறுவளமாக கூறுவதானால் சிறிலங்கா தனது நாட்டின் இறைமை தொடர்பாக பேசுகின்றது .அவ்வாறானால் ?அங்கு வாழும் இனங்களின் இறைமை தொடர்பாக அந்த இனங்களும் பேசமுடியும்.

ஓர் இனத்தின் இறைமை அழிக்கப்படும்போது ஒரு நாட்டின் இறைமையை அணைந்துலக சமுகம் புறந்தள்ள முடியும்.அதனைத்தான் கொசோவோ மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் எமக்கு கற்று தந்தன .ஏனைய நாடுகளில் நடைபெற்றுவரும் பிரிவினைக்கான போர்களுடன் ஒப்பிடும்போது ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பிரிந்து செல்வதற்கு மிகவும் சாதகமான புறசசூழல்களை  முன்னர் கொண்டிருந்ததாக கருதப்பட்டது.அதற்க்கு விடுதலைபுலிகளின் கட்டுபாட்டில் தாயக பிரதேசம் இருந்தது காரணமாக இருந்தபோதும்,தற்போது அதனைவிட வலுவான காரணங்கள் உள்ளன,பூகோள பிராந்திய முக்கியத்துவம்,தமிழ் இனத்தின் இறைமை மீதான சிறிலங்கா அரசின் வன்முறை,உலக நாடுகளின் கதவுகளை தட்டும் தமிழ் மக்களின் கூட்டு அரசியல் தஞ்சம் போன்ற பல காரணங்கள் தமிழ் மக்களின் கைகளில் உள்ளன.

அனால் மேற்குலகத்தின் இந்த நகர்வுகளை முறியடிக்க இந்திய தன்னால் முடிந்த அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்பதை நாம் புரிந்துகொண்ட அதனை எதிர்கொள்ளத்தான் வேண்டும் .எனினும் மேற்குலகம் தற்போது மேற்கொண்டுவரும் நகர்வுகளை புலம்பெயர்ந்த தமிழ் சமுகம்,தாயகத்து தமிழ் அரசியல் தலைமைகளும் இணைந்து சரியான வழியில் உள்வாங்கும் போது .சிறிலங்கா ஒரு சேர்பியாவகவும் ,தமிழீழம் ஒரு கொசொவோவகவும் மற்றம் பெரும் காலம் வெகு தொலைவில் இல்லை

நன்றி -வேல்ஸ் இல் இருந்து அருஷ்


No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை