வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, November 10, 2011

வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்!

( 2009 ) ஆம் ஆண்டு மே மாதம் ( 17 ) ஆம் திகதி நான்காம் கட்ட ஈழ போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ,விடுதலை புலிகள் முற்றாக அழிக்கபட்டு விட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது.போரின் கடைசி கட்டத்தில் (30 ) ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யபட்டனர்.இந்த போரில் மொத்தம் ஒருலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள்.( 3 ) லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறை பிடிக்கப்பட்டு முள் வேலி முகாம்களில் அடைக்கபட்டார்கள்.தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கிய தளபதிகள் குறித்தும் பல்வேறுபட்ட செய்திகள் மாறி மாறி வெளியிடப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சோர்வடைய வைத்தது.( 30 ) மேற்பட்ட மாவீரர்களும்
இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் தங்கள் இன்னுயிரை ஈந்து ( 10 ) லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக உலகநாடுகளில் தஞ்சம் புகுந்தும்,அனுபவித்த துன்பங்களும் ,துயரங்களும்,ஈடு இணையற்றவை.அனால் இந்த தியாகங்கள் வீனகிவிடுமோ,தமிழீழ தாயக கனவு சிதைந்து விடுமோ என்ற கவலை தமிழர்களின் உள்ளங்களை குடைகிறது,

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள வதை முகாம்களில் சிக்கி சீரழியும் தமிழர்களின் நிலை குறித்து உலக தமிழர்கள் சொல்லமுடியாத துன்பம் அடைந்திருக்கிறார்கள்.மீண்டும் தமிழர்விடுதலை போராட்டம் எழுச்சி பெர்ருவிட கூடாது என்பதற்காக இந்திய -சிங்கள அரசுகளின் உளவுத்துறைகள் தமிழர்களின் உளவியலை சிதைக்கும் வகையில் பொய்யான செய்திகளை தொடர்ந்தும் பரப்புவதில் ஈடுபட்டு இருக்கின்றன.விடுதலை புலிகளின் கதை முடிந்துவிட்டது என்றும் இதற்க்கு முன்பும் பலமுறை குறைப்பட்டு உள்ளது ,கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை கொல்லபட்டும் இருக்கிறார்.அனால் இந்த செய்திகளையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் மீண்டும் அவர் உயிர்தெழுந்து நொடிதுயர்ந்து நிற்பதோடு சக போராளிகளையும் மக்களையும் எழிச்சி பெற வைக்கிறார்.( 35 ) ஆண்டுகளுக்கு முன்பு தனது ( 17 ) ஆம் வயதில் ஒரு கைத்துப்பாக்கியுடன் விரல்விட்டு என்னகூடிய சக தோழர்களுடன் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை தொடங்கினார்,அப்போது இயந்திர துப்பாக்கிகள் பீரேங்கிகள் ,டோற படகுகள் போர் விமானங்கள் ,போன்ற நவீன ஆயுதங்களுடன் சிங்கள இராணுவம் வலிமைமிக்கதாக இருந்தது.

 ஆனாலும் பிரபாகரன் கொரில நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டுகோப்பு நிறைந்த இயக்கமாக விடுதலை புலிகளை உருவாக்கி சிங்கள இராணுவத்துடன் இடைவிடாது மோதி அவர்களை அச்சமடைய வைத்து முகாம்களுக்கும் முடங்கி கிடக்க வைத்தார்.திடீர் திடீர் கொரில தாக்குதல்கள் முலம் சிங்கள வீரர்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தினார்.அதே வேளையில் அரசியல் ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வை உட்டி விடுதலை போராட்டத்தை ஒரு மக்கள் போராட்டமாக மாற்றினார்.புலிகளின் வீரமும் தியாகமும் நிறைந்த நடவடிக்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தார்கள்.அதன் விளைவாக அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவும் தோள்கொடுத்து உதவவும் முன்வந்தார்கள்.(1970 ) களில் விடுதலைப் புலிகளை அடக்குவதற்காக அதிபர் ஜெயவர்த்தன தனது மருமகனான பிரிக்கேடியர் வீரதுங்காவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்து (6 ) மாத காலத்தில் பயங்கர வாதிகளை அடக்கிவரும்படி ஆணையிட்டார்.அவருக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்தார்,வாடா மாநிலம் முழுவதும் இராணுவமயம் ஆக்கபட்டது.மிக கொடூரமான முறையில் இராணுவம் மக்களை,குறிப்பாக இளையவர்களை வேட்டையாடியது,ஆனாலும் புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்தனவே தவிர குறையவில்லை.இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு பெருமளவில் ஒரு படையெடுப்பை நடத்தி சிங்கள இராணுவம் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்தது,

 இராணுவ பலம் வாய்ந்த எதிரியை முறியடிக்க மில்லர் என்ற கரும்புலியை பிரபாகரன் உருவாக்கி நெல்லியடி இராணுவ முகாமை அடியோடு தகர்த்தார், பல நுறு இராணுவ வீரர்கள் மாண்டு மடிந்த நிகழ்ச்சியை கண்டு சிங்கள அரசு திகைத்தது,கரும்புலிகளாக இளையவர்கள் மாறி மரண பயம் இல்லாமல் எதிரியை தாக்கி நாடு நடுங்க வைத்தார்கள்,புலிகளை ஒழித்துவிட முடியவில்லை,புலிகள் வலிமைபெற்று வருவதை உணர்ந்த சிங்கள அரசு இந்தியாவுடன் சேர்ந்து உடன்பாடு என்ற பெயரால் சதித்திட்டம் வகுத்து இந்திய படைகளை கொண்டுவந்து இறக்கியது.அமைதிப்படை என்ற பெயரால் வந்த படை விடுதலை புலிகளையும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் அடியோடு ஒடுக்குவதில் முனைந்து ஈடுபட்டது,தமிழீழ பகுதி முழுவதையும் முக்கியமாக.நகரங்களிலும் சிற்ருர்களிலும் (600 ) மேற்பட்ட இராணுவ முகாம்களை இந்திய படைகள் அமைத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் மிக நவீன ஆயுதங்களுடன் குவிக்க பட்டனர்.புலிகளின் நிலைகள் மீது அலையலையாக படையெடுப்புக்கள் மேற்கொள்ள பட்டன,இந்திய இராணுவத்தின் சிறப்பு பிரிவுகளையும்,மலை காடுகளில் போராடும் பயிற்ச்சி பெற்ற அதிரடிப்படை அணிகளையும் புலிகளுக்கு எதிராக ஏவிவிட்டது.

 இந்திய இலங்கை உடன்பாட்டினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபனின் போராட்டம் இந்தியாவை பற்றிய ஈழதமிழர்களின் நம்பிக்கையை சிதறடித்தது.தொடர்ந்து குமரப்பா புலேந்திரன் உட்பட (12 ) முக்கிய புலிகள் indiavin வந்சகத்தால் வீழ்த்தபட்ட நிகட்சியும் இந்தியா பற்றிய மாயவலையை முற்றிலுமாக அறுத்தெறிந்தன.இந்திய இராணுவம் சிங்கள இராணுவத்தை மிஞ்சிய அளவில் தமிழர்களை படுகொலை செய்தது .யாழ்ப்பாண போரில் மட்டும் ( 200 ) அப்பாவி பொதுமக்கள் கொல்லபட்டனர் (50 ) ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம் ஆக்கபட்டன ,நுர்ருகனக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர்,யாழ் மருத்துவமனையில் நடத்தபட்ட படுகொலை காலத்தால் அழியாத அவமான கறையை இந்தியாவின் மீது பதியவைத்தது.

இந்திய இராணுவ வரலாற்றில் அது சந்தித்த போர் நெருக்கடிகளில் புலிகளுடன் நடத்திய போரே நீண்டகால போராக நீடித்தது.இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த போரில் இந்திய இராணுவம் தனது நோக்கங்கள் எதையுமே பூர்த்தி செய்ய முடியவில்லை,புலிகள் இயக்கத்தை முற்றாக அழிப்பது ,புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்வது,புலிகளிடம் இருந்து மக்களை அந்நிய படுத்துவது ,ஆகிய அதனுடைய நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை,மாறாக கொரில படை என்ற நிலையிலிருந்த புலிகள் மரபு வழிப்படையாக பிற்காலத்தில் உருவாவதற்கு இந்த போர் உதவியது.ஆயுதங்கள் இல்லாமல் தத்தளித்த புலிகள் இந்திய இராணுவ ஆயுதங்களைப் பலவழிகளிலும் ஏராளமாக கவர்ந்தார்கள்.நகர்புற கொரிலாக்களாக இருந்த புலிகள் வன்னி காடுகளுக்குள் தமது தளங்களை மாற்றினார்கள்.அதுவே அவர்களுக்கு பெரும் பாதுக்கப்பகவும் வலிமையான அரணாகவும் அமைந்தது..

 புலிகளை அழித்துவிட முடியவில்லை.இந்திய இரனுவத்திரனுடனான போரில் ( 654 ) புலிகள் மாண்டார்கள்.மற்றும் கணிசமான பகுதியினர் சிறைப்பிடிக்கபட்டு அல்லது சிதறி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர்.பிரபாகரனுடன் வெறும் ( 50 ) பேர்கள் மட்டுமே இருந்தார்கள்.என்பது அவர்களை கொண்ட கொரில போரில் நவீன உத்திகளை கையாண்டு இந்திய படையை அவர் திணறடித்தார் என்பது வரலாறு ,ஒருபுறம் இந்திய இராணுவத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் தனது படையணிக்கு ஏரளாமான இளையவரை ஈர்த்து வன்னி காட்டில் அவர்களுக்கு பயிற்சியளித்து வலிமை வாய்ந்த படையை அவர் மீண்டும் கட்டி எழுப்பினார்.வியட்நாமில் -அமெரிக்க ,பிரான்சு படைகளை எதிர்த்து போராடிய ஹசீம் மின் அவர்களுக்கு சீனாவும், சோவியத் ஒன்றியமும் துணை நின்றதால் அந்நிய படைகளை வெளியேற்ற முடிந்தது.ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்து போராடிய கொரில இயக்கங்களுக்கு அமெரிக்காவும் ,பாகிஸ்தானும் உதவியதால் சோவியத் படைகளை வெளியேற்ற முடிந்தது.

  அனால் இந்திய படைகளை எதிர்த்து போராடிய விடுதலைப் புலிகளுக்கு உதவ எந்தவொரு நாடும்  முன்வரவில்லை ஆனாலும் தனியே மனஉறுதியுடன் போராடி இந்தியை இராணுவத்தை வெளியேற்ற வைத்த பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உரியது.இதன் காரணமாக உலகின் தலைச்சிறந்த கொரிலா இயக்கம் என்ற மதிப்பை புலிகள் இயக்கம் பெற்றது.இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாமல் போன இந்திய புலிகளை அரசியல் ரீதியாக வெல்ல திட்டமிட்டது,இத்திட்டத்தின் அடிப்படையில் போலியான மாகாணசபை தேர்தல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி தனது கையாட்களான போட்டி குழுக்களை கொண்டு மாகாண அரசு ஒன்றையும் அமைத்தது.ஆனாலும் இலங்கை அதிபர் பிரேமதாசவுடன் புலிகள் இயக்கம் பேச்சு நடத்தி.இந்திய படை வெளியேற  வேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒழிக்க வைத்தது.இதன் விளைவாக இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தது.


 இராஜீவ் காந்தி தோல்வியடைந்து வி,பி சிங்  பிரதமரானவுடன் இந்திய படை திரும்ப பெறப்பட்டது,அந்த படைகளுடனையே இந்திய கைப்பொம்மை வரதராஜ பெருமாள் கூட்டமும் இந்தியாவுக்கு தப்பி ஓடியது,இராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவை பிரபாகரன் முறியடித்தார்.புலிகள் வீழ்ந்துவிடவில்லை" முதல் (10  ) ஆண்டுகளில் கொரிலா போர் முறையை கையாண்ட விடுதலைப் புலிகள்,அடுத்த பத்து ஆண்டுகளில் மரபு வழி இராணுவமாக உருவெடுத்தனர்.தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளுடன் போராடி பல வெற்றிகளை பெற்று தங்கள் தாயகத்தின் பெரும்பகுதிகளை மீட்டெடுத்தனர்.

 தமிழீழ பகுதியில் தனி ஆட்சியை நிறுவினார்கள்.இந்த நிலைமையில் தமிழர்களின் கலாச்சார தலைநகரமான யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதன் முலம் தமிழர்களின் மனஉறுதியை குலைக்கவும்.புலிகளின் முதுகெலும்பை முறிக்கவும் திட்டமிட்டு (1995   ) ஆம் ஆண்டு டிசம்பர் ( 2 ) ஆம் திகதி பெரும் படையெடுப்பை சிங்கள இராணுவம் தொடங்கியது.சிங்களவரின் நயவஞ்சக திடத்தை முறியடிக்க திட்டமிட்ட பிரபாகரன் தற்க்காலிகமாக யாழ்பாணத்தில் இருந்து  வெளியேறுவதாக முடிவெடுத்தார்.அந்த முடிவை ஏற்று புலிகள் மட்டுமல்ல ( 5 ) லட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களும் வெளியேறிய நிகழ்ச்சி வரலாறு காணதது ஆகும்.ஒரு இடத்தை கைப்பற்றுவதை விட அதை தக்கவைப்பது மிக கடினமானது.என்பதை சிங்கள இராணுவம் காலம் கடந்து உணர்ந்தது.யாழ்பாணத்தை தங்கள் வசம் வைத்துகொள்ள ( 30  ) மேற்பட்ட இராணுவ வீரர்களை பயன்படுத்த வேண்டி நேரிட்டது.சிங்கள வீரர்களின் கணிசாமனவர்களை இவ்வாறு முடக்கிய பிரபாகரன் (1996  )  ஆம் ஆண்டில் தொடக்கி (4  ) ஆண்டு காலத்திற்குள் மாங்குளம் ,பரந்தன்,முல்லைத்தீவு,கிளிநொச்சி, வெற்றிலைக்கேணி,பூநகரி போன்ற முக்கிய முகாம்களை வீழ்த்தினர்.

வவுனியா ,வடமராட்ச்சி ,தென்மராட்ச்சி,கிழக்கு மாநிலத்தில் பெரும் பகுதிகள் ஆகியவற்றை புலிகள் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்,இறுதியாக வெல்லப்பட முடியாது என கருதப்பட்ட ஆனையிறவு முகாமை தகர்த்து சிங்கள இராணுவத்தினருக்கு புலிகள் மரண அடி கொடுத்தனர்.இந்த போர்களில் பலஆயிர கணக்கான சிங்கள வீரர்கள் மாண்டனர்.   பல நுறு கோடி பெறுமதியான ஆயுதங்களைப் புலிகள் கைப்பற்றினர்.புலிகளை ஒழித்துவிட முடியவில்லை வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றுவந்த போதிலும் பிரபாகரன் சமாதனத்துக்கான கரங்களை நீட்ட தயங்கவில்லை.சிங்கள அரசுடன் தனித்துப் பேசத்தான் விரும்பவில்லை,முன்றாவது நாடு ஒன்றின் முன்னிலையில் பேசுவதற்கு தயார் என்று பிரபாகரன் அறிவித்தார்,
 
அனால் அதை ஏற்று கொள்ள  அதிபர் சந்திரிக்கா மறுத்தபோது,சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தத்தின் விளைவாக நோர்வே நாட்டின் மத்தியஸ்தத்தை அவர் ஏற்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.உலக அரங்கில் பிரபாகரனுக்கு இரயதந்திர  ரீதியில் கிடைத்த வெற்றி இதுவாகும்.கடந்த (10   ) ஆண்டு காலத்தில் ஆகாய கடல் வெளி   சமர்.மணலாறு சமர் ,தவளை நடவடிக்கை ,கொக்குதொடுவாய் சமர்,இடி முழக்கம் ,ஓயாத அலைகள் ஒன்று,சத்ஜெய இரண்டு ,முன்று ,முறியடிப்பு சமர்,பரந்தன் ஆனையிறவு சமர் ,வவுணதீவு சமர்,கிளிநொச்சி பரந்தன் தளங்கள் மீதான உடுருவி தாக்குதல்,ஓயாத அலைகள் இரண்டு ,ஜெயசுக்குறு  முறியடிப்பு சமர்,ஓயாத அலைகள் முன்று ,ஓயாத அலைகள் நான்கு,தீச்சுவாலை முறியடிப்பு சமர் என.பல சமர்கள் பிரபாகரனின் இராணுவ திறமைக்கு சான்று கூறுகின்றன,அதிலும் வெல்லப்பட முடியாது என்று  கூறப்பட்ட ஆனையிறவு சிங்கள இராணுவ முகாமை தரை கடல் மார்க்கமாக சுற்றிவளைத்து விடுதலைப்புலிகள் நடாத்திய போராட்டம்.உலக இராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத படுகிறது,

 இரண்டாம் உலகப் போரின்போது பிரான்சில் உள்ள நோர்மேண்டி கரையில் அமெரிக்க-பிரிட்டி? படைகள் பெருமளவில் தரையிறங்கி ஜேர்மனிய படைகளை முறியடித்து போர்லின் வரை விரட்டி சென்றன.நோர்மேண்டி தரையிறக்கத்துடன் புலிகளின் ஆனையிறவு தரையிறக்கத்தை உலக இராணுவ விமர்சகர்கள் இன்றும் ஒப்பிடுகின்றனர்.உலக நாடுகளின் இராணுவ கல்லூரிகளில் இது வியப்புடன் போதிக்க படுகிறது.பிரான்சு படைகளை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சரணடைய வைத்த வியட்னாம் ஜெனரல் ஜீயா என்பவரின் போர் திறமைக்கு நிகரானது.பிரபாகரனின் திறமை என இராணுவ விமர்சகர்கள் போற்றுகின்றனர்.இந்திய -இலங்கை உடன்பாட்டின் சூத்திரதாரிகளின் ஒருவரும் பிரபாகரனை சுட்டு கொல்லுமாறு இந்திய படைகளின் தளபதிக்கு  கூறியவருமான ஜே,என் தீட்சித் பிற்காலத்தில் எழுதியுள்ள புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். புலிகளின் இயக்க தலைவரான.

 பிரபாகரனிடம் காணப்படும் ,கட்டுபாடு ,மனஉறுதி ,ஈழத்தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்துல்லவை ஆகியவை சிறந்த குணாதிசியங்கள் ஆகும்.இவர் யாராலும் எப்படி விமர்சிக்க பட்டாலும் நேன்ன்சில் சுகந்திர தாகம் சுவாலைவிட்டு எரிந்துகொண்டு இருப்பதையும் அதற்க்கு தன்னை முழுமையாக அற்பணிக்கும் சுபாவமும் அவரிடம் உள்ளது.என்பதையும் .இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாக பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது,என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைப்போல அமைதிபடையின் தளபதியாக இருந்த லெப்.ஜெனரல் . தீபிந்தர் சின் ,லெப் ஜெனரல் சர்ரோ? பாண்டே போன்றவர்களும் பிரபாகரனை வியந்து பாராட்டியுள்ளனர்.இன்னல்களும் இடர்களும் நெருக்கடியான காலகட்டங்களிலும் தளராத தன்னம்பிக்கையுடனும் குன்றாத உறுதியுடனும் செயலாற்றுவதுதான் பிரபாகரன் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம் என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் அவர்களும் குறிப்பிட்டிருந்தார்.பல உள்நாட்டு வெளிநாட்டு சக்த்திகள் பிரபாகரனை திசை திருப்பவும் ,விலைக்கு வாங்கவும் செய்த முயற்ச்சிகளும் ,விடுதலை புலிகளை பிளவுபடுத்தி பலவீன படுத்தவும் -மக்களிடம் இருந்து அந்நிய படுத்தவும் பலர் மேற்கொண்ட கடும் முயர்ச்சிகளைஎல்லாம் முறியடித்தது தான் பிரபாகரன் புலிகள் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.தனது தன்னலமற்ற நடவடிக்கைகளின் முலம் தமிழர்களை ஒரு கட்டுகோப்பான தேசிய இனமாக மாற்றி விடுதலைக்காக போராடுகின்ற முன்னணி அணியக்கியவர் பிரபாகரனே.

 தமிழ் தேசிய இனத்தை ஒன்ருபடுத்துகின்ர மாபெரும் சக்தி மட்டுமல்ல அதன் உருவாக்கமும் அவரே.தமிழர் தேசிய எழுச்சியின் வடிவமாக அவர் விளங்குகின்றார்.அவர் மரணத்தை வென்றவர்.( 17 ) இல் இருந்து சாவுடன் போராடி வருகிறார் ,தனது மக்களின் உன்னத விடுதலை என்ற கொட்பட்டிற்க்காகவே.அவர் வாழ்ந்து வருகின்றார் ,அதற்காகவே போராடி வருகின்றார்.அந்த கோட்பட்டிர்க்காகவே அவர் உயிரை தியாகம் செய்யவும் துணிந்திருக்கிறார்.வெற்றிகளும் தோல்விகளும் ,பிரதேசங்களை இழப்பதும்.மீண்டும் வெல்லுவதும் அவரை ஒருபோதும் பாதித்தது இல்லை.உடனிருந்த போராளிகளை களத்தில் இழந்த போதும்.அவரது மன உறுதி அதிகமாயிருக்கிறதே தவிர,குறைந்தது இல்லை ,அதேபோல துரோகங்களும் அவரை துவளவைத்தது இல்லை .முப்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக நடந்துவரும் போராட்டத்தில் அடுத்து என்ன என்பதை யூகித்து அறிவதிலும் அதற்க்கு மாற்று என்ன என்பதை முடிவு செய்வதிலும் அவருக்கு நிகர் அவரேதான்.போரின் கடசிகட்டத்தில் உருவாகப்போகும் நெருக்கடிகளை அவர் யூகித்து அறிந்திருந்தார்.

 அதனால்தான் பதிலடி தாக்குதலில் வலிமையை விரையம் செய்யாமல் தனது தோழர்களையும் ஆயுதங்களையும் பாதுகாப்பதில் குறியாக இருந்தார்.போர் முடிந்து பல ஆண்டு காலம் மேலாகியும் புலிகளின் ஆயுத குவியல்களை சிங்கள இராணுவத்தினரால் இன்னமும் கண்டறிய முடியவில்லை.பீரங்கிகள் ,டாங்கிகள் ,மிக வேக படகுகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,மற்றும் ஆயுதங்கள் ,ஆகியவை எல்லாம் என்ன ஆயின?எங்கு மறைந்தன இந்த கேள்விகளுக்குரிய விடையை தேடித்தான் -சிங்கள இந்திய உளவுத்துறைகள் படாத பாடுபட்டுகொண்டு இருக்கின்றன.நான்காம் கட்ட ஈழப்போர் துவங்கியதிலிருந்தே புலிகளின் குறி இராணுவ வெற்றிகளிலிருந்து விலகி சர்வதேச ஆதரவு என்பதன் மீதே குறியாக இருந்து வந்தது.புலிகளின் இப்போதைய பின்னடைவாக கருதப்படுகின்ற விடையங்கள் அனைத்துமே புலிகளின் இராயதந்திர காய் நகர்த்தலுக்கு வெற்றிகளை ஈட்டிகொடுக்கபோகும் அம்சங்களாகும்.

சர்வதேச ரீதியிலான ஆதரவே தமிழீழம் விரைவில் உருவாக வழியமைக்கும் என்பதை புலிகள் உணர்ந்திருக்கின்றார்கள்.புலிகளுக்கு தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு சிங்கள இராணுவத்தின் வலிமையோ -அதற்க்கு துணையாக நின்ற சீன,இந்திய,பாகிஸ்தான்,ஈரான்,ரஷ்ய ,போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் ( 15 ) நாடுகள் உட்பட்ட ( 20 ) ற்கும் மேற்ப்பட்ட நாடுகளின் இராணுவ உதவியும் மட்டுமே காரணமல்ல.உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் முக்கிய காரணமாகும்.அமெரிக்க மீது செப்டம்பர் ( 11 ) ஆம் திகதியன்று நடத்தபட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பெரிதும் சகித்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாக்கபட்டு விட்டது .பயங்கர வாத அமைப்புக்களுக்கும் தேசிய விடுதலைக்காய் போராடும் அமைப்புக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இது மங்க செய்து விட்டது.

 எனவே சிங்கள அரசு இந்த சந்தர்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தமிழர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக சித்தரித்து பல நாடுகளின் ஆதரவை பெற்றது ( 30 ) க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக கூறி தடை செய்துள்ளாக இதன் முலம் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசு மறைமுகமாக பெற்றுவிட்டது.இந்த வேண்டாத சூழ்நிலையை மாற்றுவதற்கு இப்போது வழி பிறந்துள்ளது. இலங்கையின் போர் அவலங்கள் உச்சநிலையை அடைந்தபோது உலகநாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் புலிக்கொடிகளுடனும் பிரபாகரனின் உருவப் பதாதைகளுடனும் வீதிகளில் இறங்கி போர்க்கொடி கொடுத்தார்கள்.தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் தமிழர்களின் ஆவேச பேரணிகள் நடைபெற்றன,தமிழ் நாட்டிலும் வெளிநாடுகளிலும் (17 ) தமிழர்கள் தீக்குளித்து தமது உயிர்களை தியாகம் செய்தார்கள்,தமிழீழ போராட்ட வரலாற்றிலே இத்தகைய ஆதரவு எழுச்சி இதற்க்கு முன் ஏற்பட்டது இல்லை,இந்த தொடர் போராட்டங்களின் விளைவாக மேற்குலக நாடுகள் பலவும் சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் கண்டனங்களை எழுப்பின,

 சிங்கள அரசு மீது போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இந்நாடுகளால் எழுப்பபட்டன,இலங்கை களத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் உலக இராஜதந்திர களத்தில் பிரபாகரனுக்கு வெற்றி கிடைத்துள்ளது.ஆசிய பகுதியில் பிராந்திய வல்லாதிக்க போட்டியில் எதிர் துருவங்களாக ஈடுபட்டிருக்கும் சீன-இந்திய ஆதிக்க சக்த்திகள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள தேசத்திற்கு கைகொடுத்தன.ஆனாலும் இரு நாடுகளுக்கிடையே இருக்ககூடிய உள்முரண்பாடுகள் நாளுக்குநாள் கூடுமே தவிர குறைய போவதில்லை.இந்துமா கடலில் இலங்கையின் உடாக சீன காலுன்ருவது தனக்கு பேராபத்து என்பதை காலம் கடந்தாவது இந்தியாவும் உணர தொடங்கியுள்ளது.அதேபோல அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இந்துமா கடலில் சீன ஆதிக்கம் வருவதை விரும்பவில்லை ,மேற்கு நாடுகளில் இருந்து கிழக்கு நாடுகளுக்கும் .கிழக்கு நாடுகளில் இருந்து ,மேற்கு நாடுகளுக்கும் ,கடல் மார்க்கம் வணிக ரீதியில் மட்டுமல்ல இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.


இந்த கடல் மார்க்கம் சீனாவின் கட்டுபாட்டுக்குள் செல்வது தங்களின் நோக்கங்களுக்கு அபயகரமானது என்பதை இந்த நாடுகள் உணர்ந்திருக்கின்றன.இதன் விளைவாகவும் உலக அரசியல் மாற்றங்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உருவாக்கி வருகின்றன.பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் ஈழத்தமிலர்களுக்கு விடுதலை கிடைக்காவிட்டால்.இனி ஒருபோதும் வேறுயார் காலத்திலும் அது கிடைக்க போவதில்லை என்பதை உலகத்தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் உக்கிரமடையும் காலகட்டம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.அதே வேளையில் தமிழீழ விடுதலை போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் தொடங்கும் முயற்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.தமிழீழ மக்களும் போராளிகளும் இதுவரை செய்துள்ள தியாகம் அளப்பரியது ,சின்னம் சிறிய தமிழீழத்தின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது இந்த தியாகம் அதன் சக்த்திக்கு மீறியதாகும்.மக்கள் தாமாக முன்வந்து தங்களது மண்ணை மீட்க செய்துள்ள இந்த தியாகம் ஒருபோதும் வீணாகாது.கடந்த (30 ) ஆண்டு காலத்தில் அந்த மக்கள் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் இன்னும் அனுபவித்து வருகின்ற துயரங்களும் அவர்களது உள்ளங்களில் உரமேற்றி உள்ளன..

 தங்கள் தலைமுறையிலையே இந்த தன்னிகரில்லா தலைவனின் காலத்திலையே தமிழீழ தாயாக விடுதலை பெற்றாக வேண்டும் ,நமது அடுத்த தலைமுறையினர் சுகந்திர நாட்டில் சுகந்திர மனிதர்களாக வாழவேண்டும்,என்ற மாறாத மனஉறுதியை இந்த மக்கள் கொண்டிருக்கிறார்கள்.தாயக விடுதலைக்காக குடும்பத்திற்கு ஒரு பிள்ளையை தாருங்கள் என்று பிரபாகரன் கேட்டபோது கொஞ்சமும் தயங்காமல் பெற்றோர்கள் தங்களது புதல்வர்களையும் புதல்விகளையும் அனுப்பி வைத்தனர்.செல்பவர்கள் மீண்டும் வராமல் போகலாம் என்று தெரிந்தே அவர்கள் பிள்ளைகளை தியாகம் செய்ய முன்வந்தவர்கள்.அதேபோல விடுதலை வேள்வியில் தான் பெற்ற பிள்ளையையும் அர்பணித்த தலைவனைத் கண்டு அந்த மக்கள் நெக்குருகிப் போயிருக்கிறார்கள்.வயதான தன பெற்றோரை கூட பாதுகாக்க பிரபாகரன் முன்வரவில்லை,மக்களுக்காவது அவர்களுக்கும் ஆகட்டும் என்ற உறுதியோடு இருக்கும் தலைவனைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்துள்ளனர்.முள் வேலி முகாமில் வதைபடும் இலட்சகணக்கான மக்களோடு அந்த மாவீரனை பெற்ற பெற்றோரும் துன்பங்களை அனுபவித்து வருவதை நேரில் காணும் மக்கள் தங்கள் தலைவனை முன்னிலும் அதிகமாக நேசிக்கிறார்கள்.

 வராது போல் வந்த மாமணியாகத் திகழும் இந்த தலைவனின் கிழ அனைத்துவகை தியாகங்களையும் செய்ய அவர்கள் உறுதிபூண்டு இருக்கிறார்கள் ,வீரமே ஆரமாகவும் ,தியாகமே ஆணியகவும் கொண்ட அந்த தலைவன் இவர்களின் கனவை நிச்சயம் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை அவர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறது.எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத தாக்குதலைத் தருவதுதான் பிரபாகரனின் சிறந்த போர் உத்தியாகும்..

 வீழ்ந்த ஈழம் எழும் !காலம் அதை சொல்லும்!  தமிழர்கள் தலைநிமிரும் காலம் வரும் எதிரிகள் கொட்டம் அடங்கும் ...ஒன்றுபட்டு பயணிப்போம் பயணித்து கொண்டிருப்போம் ..காலம் பார்த்து தலைவன் பதிலை காலத்துக்கு சொல்வான்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை