வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, November 28, 2011

தமிழக தாய் உறவுகளே கொஞ்சம் நில்லுங்கள் கவனியுங்கள் ..

""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்"""
 
 
 எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தாய் உறவுகளே .உங்கள் உணர்வுகளும் தியாகங்களும் ஈழ மக்கள் ஆகிய நாங்கள் என்றுமே மறப்பதில்லை ..அனால் இன்று நீங்கள் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? சிந்தியுங்கள் உறவுகளே நீங்கள் சரியான பாதையில் போகவில்லை என்பது எமது குற்றசாட்டு இல்லை அனால்.தெளிவானது இல்லை என்பதே எமது கருத்து .நீங்கள் எமது தலைவர் போராளிகள் மீதும் ஈழ மக்கள் மீதும் வைத்திருக்கும்
அளவற்ற அன்பும் பாசமும் நாம் என்றுமே மறக்கவும் இல்லை சுட்டி காட்டவும் இல்லை. முதலில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் எமது தேசிய தலைவர் பற்றி அவர் என்ன சொல்லியிருக்கார் என்பது பற்றி நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்."எம் மக்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பி அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் இந்த சந்தர்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.இதே நேரம் எமது தமிழீழ தனியரசு போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாக குரல் எழுப்புவதோடு இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம் மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிகொள்கிறேன்.இதை நீங்கள் கவனத்தி கொள்ளல் வேண்டும் நீங்கள் எமக்காக என்ன போராட்டம் பண்ணினாலும் ..எமது இயக்கம் மீதான தடை நீக்கபடாதா வரை எமக்கான உரிமைகளும் உங்களுக்கான உரிமைகளும் என்றுமே மறுக்கப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் ..

இந்திய அரசை பொறுத்தவரை ஒரு பலமான ஆதரவு தமிழகத்தில் ஈழத்துக்காக புலப்படாத வரை இந்திய அரசும் எமது இயக்கம் மீதான தடையை என்றுமே நீக்க போவது இல்லை.இந்திய அரசு இயக்கம் மீதான தடையை நீக்காத வரை உலக நாடுகளும் எமது இயக்கம் மீதான தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்தே காணப்படும் என்பது நாம் இதுவரை உலக நாடுகளிடம் கண்ட நீதி இதுவே ...எமது இயக்கம் தமிழகத்தில் காலுன்றி இருந்த காலங்களில் இருந்த ஆதரவு இன்று ஐன்பது சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை இதற்க்கான காரணம் என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும்,எமது இயக்கம் அதன் பின்பு வளர்ந்த வளர்ச்சிக்கு பின்னால் தமிழகத்தின் ஆதரவு குரல் என்பது மழுங்கடிக்கபட்டு கொண்டு இருந்தது என்பது யாருமே மறுக்கமுடியாத உண்மை ..ராஜீவ் மர்மமான படுகொலையை எமது இயக்கம் மீது போட்டு வளர்ந்துவரும் எமது இயக்கத்துக்கு தமிழகத்தின் ஆதரவை மழுங்கடிக்க இந்திய அரசுடன் சேர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்ச்சிக்கு வந்த அரசுகள் எல்லாம் கையாண்ட விதம் அதில் வெற்றியும் பெற்றன..அப்படியென்றால் நாம் அன்றே தோற்று விட்டோமா ?அன்று இருந்த தமிழக ஆதரவு எமது இயக்கத்திற்கு இருந்திருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் என்னும் சொற்றொடர் எம்மீது பிரயோகிக்க பட்டிருக்க முடியாது.

நாம் இன்று பலமுடன் இருந்திருப்போம் .இன்றும் நாம் வெற்றிபெறுவதற்கு தமிழக மக்களாகிய நீங்கள் படித்த மக்களில் இருந்து பாமர மக்கள் வரை எமது இனஅழிப்பு எம்மீது இந்திய அரசு ஏவிவிட்ட கொடிய போர் இவற்றின் உண்மைகளை நாம் எல்லோரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும் ..முள்ளிவாய்க்கால் என்பது எல்லோருடைய கண்களுக்கும் புலப்பட்டாலும்..அதை பற்றி பேசுபவர்களே அதிகமாக காணப்படுகிறார்கள் அதற்க்கான செயல்திறன் என்பது சில மக்களிடமே காணப்படுகிறது என்பது இன்று நாம் கண்ணால் கண்டுகொண்டு இருக்கிறோம் ...எமது மக்களுக்காக அன்றிலிருந்து இன்றுவரை போரடிகொண்டிருக்கும் அய்யா வைகோ .நெடுமாறன் அய்யா ..தற்போது தமிழக இளையவர்களை இன்று ஈழ போராட்டம் பற்றிய சிந்தனைக்குள் இழுத்துகொண்டிருக்கும் அண்ணன் சீமான் இவர்கள் பின்னால் தமிழக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் ..முக்கியமாக எமது அன்புக்குரிய அய்யா வைகோ நெடுமாறன் பின்னால் மக்கள் திரண்டு அவர்களுக்கு பெருமளவில் ஆதரவு கொடுக்க வேண்டும் ..தமிழக ஆட்ச்சி தமிழை நேசிக்கும் தமிழர்களை பூசிக்கும் ஒருவரின் கைகளில் போகும் பொழுதுதான் .தமிழக மக்கள் நின்மதி பெரும் முச்சு விடுவார்கள் ..இந்த பெரும்முச்சு ஈழ தேசம் புன்னகை சிந்துவதற்கு வழிசமைக்கும்.இன்று தமிழகம் தமிழர்களின் கைகளில் இல்லை தமிழை அழிக்க நினைக்கும் கயவர்களின் கைகளிலே..இவர்களா எமக்கு எமது மக்களுக்காக பேசுவார்கள் இல்லை போராடுவார்கள் ?? ஆட்சிக்கு வரும் மட்டும் ஈழ போராட்டம் அவர்களின் வாக்கு சீட்டு ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அவர்களின் அடிமைகள் ..இந்த நிலை மாறவேண்டும் மாறுமா ?? இனியாவது எமது தாய் உறவுகள் சிந்தனை கொள்ளுவார்கள?? கடல் அலை கொத்தளிக்காத வரை கரை மேவி செல்ல முடியாது.. மக்களிடம் தமிழன் என்ற உணர்வும் தமிழ் என்ற உணர்வும் இல்லாது போனால் ஒற்றுமை என்பது என்றும் ஓங்காது..ஒற்றுமை ஓங்காத வரை எதையுமே நாம் சாதிக்க முடியாது ..ஒன்றுபட்ட எளிச்சியின் முலமே ஈழ தமிழர்கள் வாழ்வில் விளக்கேற்ற முடியும் ..இல்லையில் ஈழ மக்களின் வாழ்வின் என்றும் ஒளி என்பது கிடைக்காமல் போய்விடும் ..தமிழக மக்களே சிந்தியுங்கள் காலம் எப்போதுமே எமக்காக வருவதில்லை நாம் தான் காலத்தை எமக்காக உருவாக்க வேண்டும் ..எதையுமே உரிமையோடு உங்களிடம் மட்டுமே ஈழ தமிழர்கள் நாங்கள் எதிர்பார்க்க முடியும் ..

"மீண்டும் ஒரு முறை .."எம் மக்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பி அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் இந்த சந்தர்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.இதே நேரம் எமது தமிழீழ தனியரசு போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாக குரல் எழுப்புவதோடு இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்துநிற்கும் எம் மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிகொள்கிறேன்.மேதகு தமிழீழ தேசியத் தலைவர் ..

அன்பான தாய் உறவுகளே என் மனதில் உள்ளதை உங்களிடம் என் உறவுகளிடம் சொல்லுவதில் தவறில்லை ..ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

"ஈழ மைந்தன் யாழ்"

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை