வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 26, 2012

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களால் 1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

நாம் அணிவகுத்துள்ளோம்

இழந்த எமது நாட்டை மீட்க


எதிரி எமது நாட்டை

வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!

அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!


புயலெனச் சீறி

இழந்த நாட்டை மீட்க

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது

நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!

ஆனால்....

அதைத் தாங்கக் கூடிய

மக்கள் ஆதரவென்னும்

கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!

எமது

ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!

எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...

ஆனால்

எமது விடுதலை நெஞ்சங்கள்

எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்

அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...

நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது அணிவகுப்பு

எமது தமிழ்ஈழ மக்களிடையே

அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...

எமது தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்

காடுகள் கழனிகள் ஆகின்றன!

வெட்டிப் பேச்சு வீரர்கள்

மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்

உவகை தெரிகிறது.

ஏழைகள் முகங்களில்

புன்னகை உதயமாகிறது.

(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களால் 1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)


  உறவுகளே இந்த  பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE   ) பகிருங்கள் என்னும் பகுதியை சொடுக்கி நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை