வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 10, 2012

குட்டித்தீவில் குமுறல்கள் ஓயவில்லை-1

தொடரினுள் புகு முன் சில வார்த்தைகள்…..

[சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், மலேசியாவின் முன்னணிப் பத்திரிகை ஒன்றில் “குட்டித்தீவைக் குலுக்கும் குமுறல்கள்” என்னும் தலைப்பில் ஈழத் தமிழர்களது அரசியல்-ஆயுதப் போராட்டம் குறித்த எனது கட்டுரைத் தொடர் வெளியாகி இருந்தது. 1986 ஆம் ஆண்டு அது ,நூலாகவும் வெளியீடு கண்டது.

Monday, January 9, 2012

கடலோர காற்று முழுநீள ஈழ திரைப்படம்


கடற்புலிகளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி கடற்புலிகள் நிதர்சனம் இணைந்து தயாரித்து .(2002 ) ஆண்டில் வெளிவந்த கடலோர காற்று முழுநேர திரைப்படம் ..இது திரைப்படம் மட்டுமல்ல ஈழ தமிழ் மக்களின் வலிகளை சுமந்த வரலாறும் என்றும் சொல்லாம் ..வரலாறுகள் மீட்டி பார்க்கவேண்டியது எமது கடமை ..எமது மக்களினதும் போராளிகளினதும் வலிகள் சுமந்த வாழ்வினை காணுங்கள்

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -4


சிறைபட்ட எவரும் விடுதலை பெறுவ தில் தீவிரமாக இருப்பார்கள். இதில் தப்பித்துச் செல்லுதலும் ஒன்று. தப்பித்துச் செல்லுதல் பற்றிய திட்டங்கள், மெனிக் ஃபார்ம் முகாமிலும் பிறந்துகொண்டே இருந்தன. இதில் வேடிக்கை என்னவெனில், பெண்கள்தான் கூடுதலாகத் தப்பிக்க முயற்சி செய்துகொண்டு இருந்தார்கள். பெண்களின் இந்த மன நிலைக்குக் காரணம், எப்படியாவது தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.
நாளடைவில் குழந்தைகளின் பாதுகாப்புபற்றிய அச்சம், முகாம்வாசிகளிடம்

Sunday, January 8, 2012

கிட்டு மாமா நினைவில் இணைந்திருப்போம்


கிட்டு மாமா. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் பரவும் உணர்வலைகளை விவரிக்கவோ, மகிழ்ச்சி, துக்கம், ஆதங்கம், கோபம், ஆற்றாமை, ஏமாற்றம், இன்னும் என்னென்ன என்று இனம் பிரிக்கவோ இயலவில்லை. அவர் என் வாழ்வில், என் மனதில் பதித்திருக்கும் தடம் அத்தனை ஆழமானது.

அவரை முதன் முதலில் நான் கண்ட போது எனக்கு 7 வயதிருக்கும். தலைவர் பிரபாகரன் மாமா மதுரையில் தங்கியிருந்த போது அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர் பின்னே மற்றுமொரு வரும் வருவார். ஆனால் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நிற்பார். பின்னர் தலைவர் மாமா கிளம்பும் போது அவரும் பின்னேயே செல்வார். அவரை நான் கவனிக்கும் சூழல் ஏற்பட்டதில்லை.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 7 (தோல்வி அல்ல தொய்வு)

 

மீண்டும் என் அலைவரிசைக்கே என் மனம் வந்தது. விரைவாக விசாரணை செய்துவிட்டு இன்றைக்கு விட்டு விடுவான் நாளைக்கு விட்டு விடுவான் என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் போன முதல் மாதத்தில் ஒரு விசாரணை செய்த பிறகு மீண்டும் 2010 மார்கழி மாதம் தான் இரண்டாவது விசாரணை செய்தார்கள். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏன் எங்களை வைத்திருக்கிறான் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறான் என்று நினைத்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை. மூளை மரத்துபோனதுபோலதான் இருந்தது.

Saturday, January 7, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 5

 

‘சேலத்துக்குப் போய்விடலாம்’ என்று குட்டிமணி சொன்னார். அவர் தயாராக இருந்தார். தங்கதுரைக்கும்கூட அதுதான் அப்போது விருப்பம். சேலத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை. நண்பர்கள் அங்கே இருந்திருக்கலாம். வேறு ஏதாவது பணிகள் இருந்திருக்கலாம். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் இருந்திருக்கலாம்.

Friday, January 6, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-3

 

டத்தப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரேலியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவைக்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தையின் பிரிவுத் துயர் சுமந்த தாய்மையின்  சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன.

Thursday, January 5, 2012

சிந்தித்து செயல்படுங்கள்

வணக்கம் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் ...உறவுகளே தற்போது சமீபமாக தேசிய மக்கள் தொலைகாட்சி என்று அழைக்கப்படும் ( GTV   ) பற்றிய சில செய்திகள்  வெளிவந்த வண்ணம் இருக்கின்றது ...இது பற்றி உங்களுடன் சிலவற்றை பகிர்ந்து கொல்லாம் என்று நினைக்கிறேன் ...இந்த தொலைகாட்சியில் நிருவனத்தொடன் நெருங்கி பழகியவர் என்று வெங்கடேஷ் என்பவரை அதிர்வு இணையதளம்

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)

 

மக்கள் நிறைய வந்துகொண்டே இருந்ததால் மலசலகூடப் பிரச்சனை அடுத்த பிரச்சனை ஆயிடுச்சு. அவ்வளவு பேரும் எங்கதான் போறது. நாங்கள் ஓர் இடத்தில கொஞ்சப்பேர் தங்கியிருந்தோம். பதினைந்து குடும்பங்கள் வரை இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்காக ஒரு ரென்ற் அமைத்து அதில் சின்ன பிள்ளைகளை தூங்க வைத்தோம். நாங்கள் வெளியில்தான் படுத்துக்கொண்டோம்.
ஆண்கள் எப்படியோ ஒரு மறைவைத்தேடி மலசலம் கழித்து வந்துவிடுவோம்

Wednesday, January 4, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் பிணவாடையில் கரைந்துபோன காற்று – 5

 

அனுபவங்களே மனிதர்களின் பெற்றோராக, உற்றாராக, மற்றோராக, நல் ஆசானாக மாறிப்போவதை துயரங்களே உறுதி செய்கின்றன. காணுகின்ற காட்சிகள் அனைத்தும் ஒலியோடு பேசும் பட்சிகள் பலவும் சருகுகளின் சலசலப்புக்கும் சங்கடங்களின் முணுமுணுப்புக்களுக்கும் கூட அனுபவமாகி விடுகின்றது. போக்கிடமற்ற பொழுதுகளில் சோகத்தில் சோர்வுற்று, துயரங்களில் தோய்தெடுத்த முகமாக என்முன்னே வந்தமர்ந்தார் முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்.

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-2


து ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.

Tuesday, January 3, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 4

 


ல்வெட்டித்துறையில் அப்போது இருபது இருபத்தைந்து இளைஞர்கள் ஒரு குழுவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் மூத்தவர்கள். இரண்டு நண்பர்கள் அவர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். ஒருவர், நடராஜா தங்கதுரை. இன்னொருவர், செல்வராஜா யோகச்சந்திரன். துடிப்பானவர்கள். ஏதாவது செய்யவேண்டும் என்கிற

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் யாருக்கும் யாரும் துணையில்லை-4


இன்னொரு இடத்தில் நாங்கள் கண்ணார பார்த்த கொடுமை. ஒரு தாய் அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக்கொண்டிருக்கின்றாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கின்றது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்த தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது.

Monday, January 2, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ ? தொடர்-1

 

யிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?
இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.
மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!
இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.

பிரான்ஸ் பார்த்து வெட்கப்பட வேண்டிய இந்தியாவும் மங்கிப்போன உணர்வுகளுடன் தமிழக மக்களும்


 எமது அடையாளங்களை  முத்திரைகளாக வெளியிட்ட  பிரான்ஸ் அரசுக்கு நன்றி சொல்லவேண்டியது தமிழர்கள் கடமை... நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..சாவதற்காக யாரும் வாழ்வதில்லை ...எமது நிலைமையும் அப்படித்தான் நாம் வாழ்வதற்காக மட்டுமே சாகிறோம் ..அனால் எமது வாழ்க்கையை சீரழித்து எம்மை சாகடிக்கிறான் எதிரி ..நாம் அவனிடமும் எமது வாழ்வியலை காக்கவும் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறோம்.எமது போராட்டம் அறபோராட்டம் அகிம்சை போராட்டம் கடைசியில் ஆயுத

Sunday, January 1, 2012

தலைவர் பிரபாகரன் தொடர் 3

 


ந்தல் போட்டிருந்தார்கள். பெரிய பந்தல். வீட்டுக்குப் பக்கத்திலேயே, காம்பவுண்டுக்கு உள்ளேயே. நீரில் நனைத்து மாவிலைக் கொத்து செருகி, இரண்டு வாழை மரங்களை நிமிர்த்தி வைத்துக் கட்டினார்கள். உறவுக்காரர்களும் நண்பர்களும் வண்டி கட்டிக்கொண்டு வாசலில் வந்து இறங்கியபோது ஊரே திரண்டு நின்று வரவேற்றது.
வேலுப்பிள்ளை வீட்டுத் திருமணம் என்பது ஊர்த் திருவிழா மாதிரி. ஒப்புக்குக் கூட பத்திரிகை என்று ஏதும் அச்சடிக்கவில்லை. எல்லாம் வாய்வார்த்தைதான்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3


தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்
ltte
குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை வேட்கையையும் வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.
அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்?

தலைவர் பிரபாகரன் தொடர் 2


ந்து வயதுப் பையன்கள் யாரும் அந்த மாதிரி மணிக்கணக்கில் பொறுமையாக உட்காரமாட்டார்கள். கலவரம், உயிரிழப்பு, கண்ணீர், சோகம் என்று பெரியவர்கள் கதறுவதை உணர்ச்சிவசப்படாமல் உற்றுநோக்க மாட்டார்கள். குடியுரிமைச் சிக்கல் தொடர்பான விவாதங்களை உன்னிப்பாக கவனிக்கமாட்டார்கள். மொழியால், இனத்தால், கலாசாரத்தால் முற்றிலும் வேறுபட்ட இரண்டு இனங்களின் பிரச்னையைக் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்க உள்ளபடியே விரும்பமாட்டார்கள்.

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2

 

வெட்கத்தையும் பரிகசித்தார்கள் எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும் ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக் காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும் ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.
வெட்கத்தையும் பரிகசித்தவர்களின் பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம்

ஈழகாவியம் - 09


புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:11 நிகழ்காலம்.
இந்தப் பொழுதின் மாவீரர் நாள்
கார்த்திகை மைந்தர் வணக்கம்!
(அறுசீர் விருத்தம்)

கார்த்திகைக் காலம் இந்நாள்!
கதையொடும் சிதைகள் நின்று
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை