வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்
Showing posts with label உணர்வுகளை இறக்கி வைத்த நேரம். Show all posts
Showing posts with label உணர்வுகளை இறக்கி வைத்த நேரம். Show all posts

Tuesday, January 3, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் யாருக்கும் யாரும் துணையில்லை-4


இன்னொரு இடத்தில் நாங்கள் கண்ணார பார்த்த கொடுமை. ஒரு தாய் அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக்கொண்டிருக்கின்றாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கின்றது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்த தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது.

Sunday, January 1, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3


தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்
ltte
குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை வேட்கையையும் வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.
அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்?

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 2

 

வெட்கத்தையும் பரிகசித்தார்கள் எல்லோருக்கும் ஒன்றாகவே புலரும் பொழுதுகள் சிலருக்கு மகிழ்வாகவும் மன நிறைவாகவும், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட சாராருக்கு தேடலும் நம்பிக்கையுமாக, விரக்தியும் வேதனையுமாக, தோல்வியும் ஏமாற்றமுமாக, குரோதமும் துரோகமுமாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு வாழ்வைக் காத்துக் கொள்ளும் ஓட்டமும் நடையுமாக, ரத்தமும் சதையுமாக, அழுகையும் ஆர்ப்பரிப்புமாக இருக்கிறது.
வெட்கத்தையும் பரிகசித்தவர்களின் பார்வையில் தவித்தவளின் தவிப்பு இது. உடல் பசி கொண்டவர்கள் முன் அடங்க முறுக்கும் கோபத் தீயுடன் மௌனமாவளின் ஆங்காரம் இது. எம்

Thursday, December 29, 2011

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1


முதல்முறை வந்தது வசந்தம் namikkaiசுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள் இளைஞர்கள்.
“எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள் இளைஞர்கள்.
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை