வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, December 8, 2011

புலம் ஈழம் முழு நீள திரைப்படம்



பதிவுகளை படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி

ஈழக் கனவுகள் -முழு நீள திரைப்படம்






தமிழரின் வாழ்வும் அவர்கள் சுமந்த வடுக்களும் ..என்றும் அழியாதவை

பதிவுகளை படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள் நன்றி

எங்கள் ஈழம்-,புலம் ஈழம்,-மண்ணும் சிவந்தது -குறும் படம்

எங்கள் ஈழம்-,புலம் ஈழம்,-மண்ணும் சிவந்தது ஈழம் சார்ந்த குறும்படங்கள் இணைக்கபட்டு

மாவீரர்களை மதிப்போம்...


ஒவ்வொரு மாவீரரும் களத்தில் வீழும்போது தன் இனத்தின், தன்மக்களின் மீது பற்றுவைத்து, தான் வீழ்ந்தாலும் தன் இனத்திற்கு ஒருநாடு வேண்டும், அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற

Wednesday, December 7, 2011

புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் வரலாறு பாகம்-1

  புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர்  கேணல் சாள்ஸ்

கருத்திலே தமிழ்கொண்டு  களத்திடை பகைவென்ற புலிப்படை மாவீரரின் .கரும்புலியாய் வாழ்ந்து கரும்புலியால்  வாழ்ந்து  கரும்புலிகளோடு வாழ்ந்து கரும்புலிகளுக்காக வாழ்ந்து இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்த கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலை கனவை நினைவாக்க களம்பல அமைத்து வழிநடத்திய தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையின் துணை பொறுப்பாளர் இணைபொருப்பாளர் கேணல் சாள்ஸ்

*** கவனம் கவனம் தமிழர் தேசம் விடியல் காணும் பொழுதில் கவனம் .பகை உளவு பாக்க அதிக வழியில் தினமும் வருவான் கவனம் ***

Monday, December 5, 2011

கரும்புலி நிலவன், ஒரு வரலாற்றுப் பதிவு.

மாதம் ஒரு முறை நடக்கும் துளசிராம் இலக்கிய வட்டத்திற்குச் சென்ற போது நிலவனைச் சந்தித்திருக்கிறேன். அவனை நான் பெரிது படுத்தியதில்லை. சக போராளி என்ற மதிப்பை மாத்திரம் கொடுத்தேன். அதற்கு மேல் என்னத்தைச் செய்ய முடியும்.
அவனுடைய வரலாறு சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்றேன். அதை முழுமையானது என்று சொல்ல முடியாது. துண்டுகளாகச் சில செய்திகள் வாய்வழியாக கிடைத்தன. அவற்றைப் பொருத்தி எழுதுகிறேன். வரலாறு என்று தலைப்பிட்டாலும் துணுக்குகள் என்றால் மிகப் பொருத்தம்.


துளசிராம் மட்டக்களப்புப் போராளி. இலட்சியத்திற்காக உயிரீகம் செய்த மாவீரன். எழுத்தில் வல்லவனான இந்த மாவீரன் நினைவாக இந்த இலக்கிய வட்டம் உருவாக்கப்பட்டது. அனேகமான சந்திப்புக்கள் உழவனூர் நவம் அறிவு கூடத்தில் நடக்கும்

சோபனா (இசைப்பிரிய ) வரலாறு

இசைப்பிரிய (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் வெள்ளை நிறமும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா முவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன.இக்காலகட்டத்தில்

Sunday, December 4, 2011

தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

புவி வெப்பம், பருவநிலை மாறுதல்களால் கடல் வெகுவாக மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகியுள்ளது. இயற்கையின் சீர்கேடு மீனவனின் வாழ்வில் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டால் அரசாங்கமும், அதன் திட்டங்களும் அவன் வாழ்வில் மேலும் மண்ணை அள்ளிப் போடுவதென்பது கொஞ்ச நஞ்சமல்ல.

1959-ல் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கிராமத்தில் மீனவர்களுக்கு அரசின் சார்பில் விசைப்படகு வழங்கப்பட்டது. கட்டுமரங்களில் மட்டுமே மீன் பிடித்துப் பழக்கப்பட்ட தமிழக

Saturday, December 3, 2011

போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க இலங்கை அரங்கேற்றும் நாடகங்கள்!

 இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன. இலங்கை இதிலிருந்து மீண்டெழ முடியாதளவிற்கு மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்புச் சபையும் ஐ.நா. மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இதனால், ஒரு விசாரணைக் குழுவை அமைக்கின்ற நிர்ப்பந்தமும் ஐ.நாவிற்கு ஏற்பட்டு, குழுவொன்றையும் அது அமைத்தது. அது இலங்கையின் போர்க் குற்றத்தை கண்டறிவதில் எவ்வளவு தூரத்திற்கு செயற்படும் என்பதற்கும் அப்பால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடிந்த அனைத்து வழிகளின் ஊடாகவும் இலங்கை களமிறங்கியுள்ளது.

Thursday, December 1, 2011

துணிவுமில்லை, மனமுமில்லை

 எந்தவொரு நாடும் உலக அரங்கில் மதிக்கப்படுவது அதன் இராணுவ பலத்தாலோ, பொருளாதார பலத்தாலோ, மக்கள்தொகை அல்லது நிலப்பரப்பின் அடிப்படையிலோ மட்டுமல்ல. அந்த நாடு தனது குடிமக்களை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது, அவர்களது உரிமைகளை மதிக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் ஒரு நாடும் அதன் தலைமையும் மதிக்கப்படுகிறது, மரியாதை பெறுகிறது. சமீபகாலமாக நிகழும் சில சம்பவங்கள் இந்தியாவை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சீன சரக்குப் படகு ஜப்பானியக் கடலோரக் காவல்படையின் ரோந்துப் படகின்மீது மோதிவிட்டது. ஜப்பானியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் அந்தச் சீனப் படகின் கேப்டனைக் கைது செய்துவிட்டனர்.

Wednesday, November 30, 2011

தமிழன் எனும் கோமாளி!

ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது
ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும்.அனைத்து தளங்களிலும் விவாதங்கள்
நடந்து முடிந்து விட்டன.இவற்றை எல்லாம் பார்க்கும் போது இன்று தமிழ் பரப்பை
ஒரு மோசமான நோய் பீடித்துகொண்டுள்ளதை  அறிய முடிகிறது .
அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய்.அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும்
ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய்

Tuesday, November 29, 2011

நேற்றுபோல் இருக்கிறது நெஞ்சகலா அந்த நினைவு

 
நேற்றுபோல் இருக்கிறது 
 நெஞ்சகலா அந்த நினைவு
பச்சிளம் பாலகரை
பத்துமாத தாய் வயிற்றை
பிய்த்தெறிந்த
பிசாசுகளின்
கொத்துகுண்டின்
கொடூர ஒலி
நித்தம் நித்தம் ஒலிக்கிறது-என்
நெஞ்சம் இன்னும் பதைக்கிறது
எத்தனை மரணங்களை

Monday, November 28, 2011

தமிழக தாய் உறவுகளே கொஞ்சம் நில்லுங்கள் கவனியுங்கள் ..

""மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும்"""
 
 
 எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தாய் உறவுகளே .உங்கள் உணர்வுகளும் தியாகங்களும் ஈழ மக்கள் ஆகிய நாங்கள் என்றுமே மறப்பதில்லை ..அனால் இன்று நீங்கள் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? சிந்தியுங்கள் உறவுகளே நீங்கள் சரியான பாதையில் போகவில்லை என்பது எமது குற்றசாட்டு இல்லை அனால்.தெளிவானது இல்லை என்பதே எமது கருத்து .நீங்கள் எமது தலைவர் போராளிகள் மீதும் ஈழ மக்கள் மீதும் வைத்திருக்கும்

Sunday, November 27, 2011

2011-மாவீரர் தினத்தையொட்டி தமிழ் உணர்வாளர்களின் கருத்துக்கள்

திரு.வைகோ அய்யா .திரு. நெடுமாறன் அய்யா . உள்ளிட்ட அனைவரின் மாவீரர் தின கருத்துக்கள் ஒரே பிளேயரில் கேளுங்கள்

ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலன்றி தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது! -

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.


இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப்

Saturday, November 26, 2011

மாவீரர் நினைவு சுமந்த (2011 ) பாடல்




சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்


சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன்

கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.

புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

Friday, November 25, 2011

நாமும் வாழ்த்துவோம் வாருங்கள் எமது தலைவரை







தாகம் தாகம் கடல் சூழ்ந்த இடமெல்லாமே தாகம்
தமிழன் ஆண்டது சொந்த மண்ணை
கதைகளிலும் காவியங்களிலும் கேட்டது மட்டுமே
சுவடுகளும் வரலாறுகளும் உண்மை கூறின
கல் தோன்றி மண் தோன்றா காலங்களில் தமிழ் அன்றாம்
ஒரு பிடி மண் இல்லை தமிழனுக்கு இன்றாம்
தமிழன் உணரவில்லை அன்றும் உண்மையை
வெகுளியாய் நம்பியதால்

Wednesday, November 23, 2011

கொசோவோ தமிழீழம் தொடர்பில் ...


 --மேற்குலகத்தின் நகர்வுகளில் உள்ள ஒற்றுமைகள் --

அனைத்துலக ரீதியில் சிறிலங்கா தொடர்பான செய்திகள் அண்மைய காலங்களாக தலைப்பு செய்திகளாக மாற்றம் பெற்றுவருகின்றன.  சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்களும் ,அது தொடர்பில் மேற்குலகம் கொண்டுள்ள போக்கும் தான் அதற்க்கான பிரதான காரணம்.சிறிலங்கா அரசு மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் என்பது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகவே கொண்டது.இந்த இரு காரணிகளையும் முன்னிறுத்தியே மேற்குலகமும் சரி ஐநாவும் சரி சிறிலங்கா விடையத்தில் தலையை நுழைக்க போகின்றன.மேற்குலகத்தை பொறுத்தவரையில் சிறிலங்கா விடையத்தில் உள்நுளையவேண்டிய

Tuesday, November 22, 2011

தேசியத்தலைவர் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு


தேசியத்தலைவர் சகோதரர் மனோகரன் அவர்களை முன்பு அலைகள் இணையதளம் பேட்டிகண்டிருன்தது ..அந்த பகிர்வை மீண்டும் காலத்தின் தேவை கருதி எமது வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம்

கேள்வி :-
நீங்கள் பிரபாகரனின் அண்ணன்.உங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது .அதிகாரத்தில் சகோதரர் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும்.
அதோ பாடுங்கள் சிங்கள ஆட்சியை கோத்தபாய ராஜபட்ச ,பசில் ராஜபட்ச ,
போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.அதே போல் நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்ச்சிக்கவில்லை?
Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை